Wednesday, July 8, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

வேட்பாளர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் கட்சிகள்..!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் பிரதான அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின. குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. தேசிய மக்கள் சக்தி...

புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை..!

இலங்கையில் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  இந்த நாட்டில் விவசாய துறையில் நிலவும்...

மைத்திரிபால சிறிசேனவில் சுயசரிதை வெளியீடு..!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சுயசரிதையான சிஹினயாநோனிமியாவை வெள்ளிக்கிழமை (4) கொழும்பில் வெளியிட்டார் . நிகழ்வில் பேசிய சிறிசேனா, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாதது குறித்து உரையாற்றினார். “என்னை இழிவுபடுத்த விரும்புபவர்கள் இந்த புத்தகத்தில் ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஏதாவது கண்டுபிடிக்க எதிர்பார்க்கலாம். நான் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட...

“பார்வையாளராக” இருப்பதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர்..!

புதிய அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சந்தர்ப்பத்திற்கு தகுதியான நிலையில் தற்போது தான் ஒரு “பார்வையாளராக” இருப்பதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். 'எக்ஸ்' (முன்னாள் ட்விட்டர்) இல் ஒரு பதிவில், கொடஹேவா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்ததாகவும், தனது முதல் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகவும், பின்னர் மாநில அமைச்சர்...

நாளை ஆரம்பமாகவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு..!

இலங்கையில் 15 ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் வீடமைப்புக்கான தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா சேனவிரத்னவின் கருத்துப்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் நாடு முழுவதிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று முக்கிய தரவுகளை சேகரிப்பார்கள். 2012 மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில்,...

இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்..!

சீதுவ விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையில் 24 வயதுடைய பெண்ணொருவர் தடுப்பூசி மருந்தின் பாதகமான எதிர்விளைவுகளுடன் தொடர்புடையதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்ற பரிதாபகரமான மரணம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இந்தக் குழு செயற்படும் என அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். உள்ளக விசாரணைக்கு கூடுதலாக,...

டெங்கு நோய் அபாயம்..!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39,698 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 9,928 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதேநேரம், டெங்கு நோயினால் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 19 பேர் பலியாகியுள்ளனர் என தேசிய டெங்கு...

ஒரு வலையில் 2000 கிலோ கீரி மீன்கள்..!

மட்டக்களப்பு காத்தான்குடி கடல் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை(06) ஒரே வலையில் சுமார் 2000 கிலோ கீரி மீன்கள் பிடிபட்டுள்ளது. இதற்கமைய,ஒரு கிலோ கீரி மீன்  சந்தையில் 1200 ரூபாய் வரை விற்பனையாகின்ற போதிலும் இன்று காலை (06) அதிகளவிலான கீரிமீன்கள் பிடிக்கப்பட்டதால் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உழவு இயந்திரத்தில் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் பலி…!

உழவு இயந்திரத்தில் கனரக வாகனம் மோதியதில் சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார் மற்றைய நபர் காயம் அடைந்து நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மல்வத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையில் நேற்று சனிக்கிழமை (05.10) மாலை 04.15 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில்...

கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள122 சுயேட்சைக் குழுக்கள்..!

2024ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்காக 122 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் மாத்திரம் 36 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே அதிகளவான சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. குறித்த இரண்டு மாவட்டங்களிலும், 15 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை...
- Advertisement -

Latest News

சட்டவிரோத வாகன இறக்குமதி: மோசடியில் ஈடுபட்ட நபர் கைது 

 சுங்கத் தீர்வைகள் செலுத்தப்படாது நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டில், ஹோமாகம - பிட்டிபன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்...