Wednesday, July 8, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது…!

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரைட்வெல் தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவரை உபகரணங்களுடன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் கைதான சந்தேகநபர்கள் 38 மற்றும் 42 வயதுடைய பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

நேருக்கு நேர் மோதிய கார் மற்றும் டிப்பர்; ஒருவர் பலி…!

பெலியத்த வலஸ்முல்ல வீதியில் பெலியத்த நகருக்கு அருகில் காரும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த பெலியஅத்த வஹரக்கொட அலஹேன பகுதியைச் சேர்ந்த பாலமானகே ஆரியபால என்ற 72 வயதுடைய திருமணமான நபரே உயிரிழந்துள்ளார். விபத்தில் பலத்த காயம் அடைந்த...

170 ஓட்டங்களால் 7வது தர்மமுழக்கம் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது, தர்மபுரம் மத்திய கல்லூரி அணி…. 

தர்மமுழக்கம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய பாடசாலை களுக்கிடையிலான 7வது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் தர்மபுரம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய இரண்டாவதும் இறுதி நாள்  போட்டியில் தர்மபுரம் மத்திய கல்லூரி அணி 170 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முழங்காவில் மகா வித்தியாலய அணியை வீழ்த்தி...

அநுராதபுரம் வீதியில் விபத்து….!

பாதெனிய - அநுராதபுரம் வீதியில் தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு பஸ்ஸை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது, இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

இன்றைய நாளுக்கான வானிலை….

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல், வடமேல்...

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து…!

கொழும்பு, புறக்கோட்டை, மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை (05.10) இடம்பெற்றுள்ளதோடு,  அருகில் இருந்த மேலும்  இரண்டு வீடுகளில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு இரண்டு மாநகர சபையின் தீயணைப்பு படையினரால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான சொகுசு வாகனம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை…!

நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் சொகுசு வாகனம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு விசாரணை நடத்தி வருகின்றது. பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சொகுசு வாகனம் ஒன்றை பியூமி ஹன்சமாலி கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சொகுசு வாகனத்தை கொள்வனவு செய்ய செலவிடப்பட்ட...

போதைப்பொருள் கலந்த உணவுடன் சிறையிலுள்ள கணவனை பார்க்க சென்ற மனைவி…!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவனுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கலந்த உணவை கொண்டு சென்ற பெண்ணொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம், சுச்சாரித்தாகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்ப்பதற்காக பெண்ணொருவர்  அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார். இதன்போது,...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்தியச் செயற் குழு என்பன கூடி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மாத்திரமே இந்த தீர்மானம்...

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளர் நியமனம்…

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு பெற்றதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -

Latest News

சட்டவிரோத வாகன இறக்குமதி: மோசடியில் ஈடுபட்ட நபர் கைது 

 சுங்கத் தீர்வைகள் செலுத்தப்படாது நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டில், ஹோமாகம - பிட்டிபன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்...