Tuesday, July 7, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

வெள்ளவத்தை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு…!

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இன்று (03.10) பிற்பகல் வெள்ளவத்தை பொலிஸாருக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவராத நிலையில், 05 அடி 04 அங்குல உயரம் கொண்டவர் எனவும் அவருக்கு  45 வயது இருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். நெல்லியடி புடவைக்கடைக்கு தீ வைப்பு…!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டதில், கடையில் இருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. நெல்லியடி சந்தைக்கு அண்மையில் உள்ள புடவைக்கடைக்குள் நேற்று புதன்கிழமை (02.10)  இரவு , மூவர் அடங்கிய வன்முறை கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ஆடைகள் மீது பெற்றோலை ஊற்றி தீ...

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்…!

பாராளுமன்றத் தேர்தல்  முடிவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமான தீர்மானத்தை அறிவிப்போம் என  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு சட்ட நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக முக்கியஸ்தர்களுடன் ஆரம்பக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. "நாங்கள் தேவையான அடிப்படை...

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்கு விசாரணை…!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03.10) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம்...

கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது…!

வெல்லம்பிட்டி வேரகொட களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் வாள் மற்றும் மன்னா கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சந்தேக...

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்; இலங்கையர்களின் நிலமை என்ன…?

இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை பிரஜைகள் எவருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக தூதுவர் தெரிவித்துள்ளார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களின் மத்தியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரானால் ஆதரிக்கப்படும்...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பியுமா” வுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா" என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (02.10) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா" துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம்...

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள மூன்று சுயேச்சைக் குழுக்கள்…!

திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆணையாளருமான சர்மிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். சுயேச்சைக் குழுக்கள்  உதவி  ஆணையர் ஆர். சசிலன் மேற்பார்வையில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை  செலுத்தியுள்ளனர். ஒரு குழுவில் ஏழு பேர் இருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு குழுவும் 14,000 ரூபாவை...

பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக நீதிமன்றின் உத்தரவு…!

இராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி...

இன்று முதல் ஆரம்பமாகும் அமெரிக்க பன்முகத்தன்மை குடிவரவு வீசா திட்டம்…!

இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க பன்முகத்தன்மை குடிவரவு வீசா திட்டத்திற்கு இன்று இரவு முதல் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. US Diversity Immigrant Visa Program என்று அழைக்கப்படும், DV-2026 திட்டத்திற்கான விண்ணப்பங்கள், அக்டோபர் 2, 2024 முதல் நவம்பர் 5, 2024 வரை ஏற்றுக்கொள்ளப்படுவதோடு 2026 நிதியாண்டுக்கு, 55 000...
- Advertisement -

Latest News

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட அதிரடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின்...