Tuesday, July 7, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

குறைக்கப்பட்டுள்ள கொள்கலன் போக்குவரத்து கட்டணம்…!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டமையால் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று செவ்வாய்க்கிழமை (01.10) நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள  கருத்து தெரிவிக்கையில், “அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்ததால், ஒட்டோ டீசல் விலை  24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அந்த விலைகளுடன்...

மத்திய வங்கி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை…!

மத்திய வங்கி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது தொடர்பில் அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். திருமண வைபவத்திற்கு செல்வதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் நிகழ்வுகள் தற்போது...

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை; டி.ஜே. கருணாரத்ன!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. கருணாரத்ன, போதியளவு கையிருப்பு பராமரிக்கப்பட்டு வருவதால், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என மக்களுக்கு உறுதியளித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணாரத்ன, சரக்கு பராமரிப்பு அட்டவணையை வாராந்த அடிப்படையில் நிர்ணயித்து, நிலையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான எதிர்கால திட்டங்களை CPC கொண்டுள்ளது. “அடுத்த மூன்று மாதங்களுக்கு...

இன்றைய நாளுக்குரிய வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ,மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய...

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இவர்கள் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை நாட்டில் தங்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர். இந்த விஜயத்தின் போது, இலங்கையின் புதிய பொருளாதார...

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நியமிப்பு!

உடன் அமுலுக்கு வரும் வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக BMD நிலுஷா பாலசூரியவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகமான ஹர்ஷ இலுக்பிட்டிய அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனவே அந்த...

போதைப்பொருளுடன்  பெண்ணொருவர் கைது!

கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பர்கியூஷன் வீதியில் ஐஸ் போதைப்பொருள், பணத்துடன் பெண் ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடமிருந்து 33 கிராம் 270...

காணி ஒன்றிலிருந்து இனம்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

கொட்டாவை அதிவேக வீதிக்கருகில் மிஹிந்து மாவத்தை பிரதேசத்திலுள்ள காணி ஒன்றிலிருந்து இன்று (01.10.2024) பிற்பகல் ஆணொருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 50 வயதுடையவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் தெரியவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோமாகம மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் சுமார் ஒரு வார காலமாக நிலவிய துர்நாற்றம் தொடர்பில்...

ஜனாதிபதியை சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்   யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01.10.2024) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட  அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்த எஸ். ஸ்ரீதரன் , ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக எச்.எஸ்.கே.பண்டார!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக எச்.எஸ்.கே.பண்டாரவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய தினித் சிந்தக கருணாரத்ன பதவி விலகியதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எச்.எஸ்.கே.பண்டார அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக (நிர்வாகி) பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் தரம் I அதிகாரி ஆவார்.  
- Advertisement -

Latest News

நீர்கொழும்பு சிறை கலவரம்: 700 கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வன்முறையை தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 700 கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக...