Wednesday, July 8, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

வெளிநாடு செல்லும் இலங்கையர்களின்  எண்ணிக்கை அதிகரிப்பு…!

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளதாவது, செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 28,344 பேர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். அதற்கிணங்க வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின்...

தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை  இழக்க நேரிடும்; வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு எச்சரிக்கை…

தமிழ் தேசிய அரசியல்  கட்சிகள் கூட்டாக இணையாத  சந்தர்ப்பத்தில்  வாக்குகள் சிதறப்பட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் குறைவடைவதுடன்,குறிப்பாக திருகோணமலை மற்றும் அம்பாறை  மாவட்டங்களில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை  இழக்க வேண்டி நேரிடும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு எச்சரித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட தலைவர்கள் இணைந்து நேற்றைய தினம்...

சாள்ஸ் நிர்மலநாதன் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி…

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம்  ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பிரதான தமிழ்க் கட்சிகள் பாராளுமன்ற பொதுத் தேர்தலில்  தனித்து களம் காண்கிறது. அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக  வன்னி மாவட்டத்தின் வேட்பாளர்கள் தெரிவில்  தாமதம்...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை…!

கொழும்பு, புறக்கோட்டை,  ரெக்மலேஷன் வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (05.10) அதிகாலை 1.3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிரிக்கெட் விளையாடிய மாணவன் உயிரிழப்பு…!

கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் தலைப்பகுதி மோதியதில் காயம் ஏற்பட்டு  உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (04.10) பாடசாலை இடைவேளை நேரத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பிடி எடுப்பதற்காக ஓடிய குறித்த மாணவன், கால் தடுக்கி விழுந்துள்ளார். அவரின் தலைப்பகுதி பாடசாலை கட்டடமொன்றின் சுவரில் மோதியதால் தலைப்பகுதியில்...

துப்பாக்கிகளை மீள பெற்றுக்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்…

பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீள பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவை என்ன என்பதை ஆராய்ந்த பின்னர் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்கப்படும் என...

அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதி திறப்பு…!

கொழும்பு அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொடுண்டா சுற்றுவட்டம் வரை  செல்லும் வீதி வெள்ளிக்கிழமை (04.10) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக குறித்த வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வீதி திறக்கப்பட்டமையினால் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பொதுமக்களுக்கு இலகுவாக பயணிக்க வழிவகுக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

வீதியின் நடுவில் உறங்கிய நபர்; பேருந்து மோதியதில் பலி…!

திவுலபிட்டியவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திவுலபிட்டிய நைவல தோட்டத்தில் நேற்று (05.10) வீதியின் நடுவில் பாதுகாப்பின்றி உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது திவுலப்பிட்டியிலிருந்து நைவல நோக்கி பயணித்த பேருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்தவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நைவல தோட்டம் வெயங்கொட பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவரே...

இன்றைய நாளுக்கான வானிலை…

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி  கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு ,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்...

கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி..!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04) 123.50 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக  கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 12,053.49 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டன. இன்றைய வர்த்தக நாள் நிறைவில் மொத்த புரள்வு 2.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக  கொழும்பு பங்குச்...
- Advertisement -

Latest News

சட்டவிரோத வாகன இறக்குமதி: மோசடியில் ஈடுபட்ட நபர் கைது 

 சுங்கத் தீர்வைகள் செலுத்தப்படாது நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டில், ஹோமாகம - பிட்டிபன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்...