Saturday, July 11, 2026
No menu items!

News Line

இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடும் இஸ்ரேல்..!!

சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும், தெற்கு காசா பகுதியில் பாலஸ்தீனியர்களின் கடைசி புகலிடமான ரஃபாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் இஸ்ரேலை ஆதரிக்கும் AIPAC காங்கிரஸில் இணைந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்ட  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த அமைப்பு ஜனாதிபதி...

அநீதிக்கு எதிராக வவுனியாவில் பாரிய போராட்டம்..!

சிவராத்திரி தினத்தன்று சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள சிவபக்தர்களை விடுவிக்கக்கோரி பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை எதிர்வரும் 15 ஆம் திகதி வவுனியாவில் முன்னெடுக்கவுள்ளதாக  வெடுக்குநாறிமலை  ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபை தலைவர், செல்லத்துரை சசிகுமார் அறிவித்துள்ளார். இது குறித்த அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில், எமது ஆலய...

பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக் காதலன்…!

ஓமானில் வீட்டு வேலை செய்துவிட்டு நாடு திரும்பிய பெண்ணை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொண்ட நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். பேஸ்புக் ஊடாக குறித்த பெண்ணை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர், அவருடன் நெருங்கிய உறவை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம மல்வனேகம பிரதேசத்தில்...

போதைப்பொருள் வியாபாரி வெட்டிப் படுகொலை..!

கம்பஹா-கந்தானை பிரதேசத்தில் நேற்று(13) பகல் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது வீட்டுக்கு முன்பாக ஹயஸ் வாகனத்தில் வந்த நான்கு பேர் அடங்கிய வன்முறைக் கும்பல், மேற்படி நபர் மீது வாள்வெட்டுத்...

வீதியைக் கடக்க முற்பட்ட பெண் மரணம்..!

லுனுவில, ஜயா மாவத்தையைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவர் வீதியைக் கடக்க முயன்ற போது பஸ் ஒன்றில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாதசாரிகள் குழுவொன்று வீதியைக் கடக்கும்போது, நீர்கொழும்பு பகுதியில் இருந்து சிலாபம் சென்ற பஸ் ஒன்று நிறுத்தப்பட்டு மீண்டும் முன்னோக்கிச் செல்ல முற்பட்டபோது, முன்பக்கமாக வீதியைக் கடக்க முற்பட்ட குறித்த பெண் மீது பஸ்...

தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது கிடையாது பொன்சேகா!

தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு வடக்கு, கிழக்கு நிலைவரம் எவ்வாறு உள்ளது, ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன்...

கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிவிப்பு..!

கிராம உத்தியோகத்தர்களுக்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இன்று(13 ), நாளை(14) மற்றும் நாளை மறுதினம்(15) ஆகிய தினங்களில், நாரஹேன்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ தலைமையகத்தின் உள்நாட்டலுவல்கள் பிரிவில் நேர்முகப் பரீட்சை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், உரிய தகைமைகளைப் பெற்று இதுவரை அழைப்புக் கடிதங்களை பெறாத விண்ணப்பதாரர்கள்...

1400 கிலோ புகையிலைகளை கைப்பற்றிய காவல்துறையினர்..!

தூத்துக்குடி மாவட்டத்தின் திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணியளவில் ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோதே இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு கோடி ரூபா பெறுமதியான புகையிலைகளை தமிழக காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஒவ்வொன்றும் 35 கிலோ எடை கொண்ட 40 பண்டல்களில் 1400 கிலோ புகையிலைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் புகையிலைகளை ஏற்றி வந்த வாகனம் மற்றும் வாகனத்தில்...

தொண்டையில் மாத்திரை சிக்கி உயிரிழந்த சிறுமி..!

மஹியங்கனையில் மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் நேற்று(12) உயிரிழந்துள்ளார். ஓஷதி சவிந்தயா ராஜபக்ச என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்...

வெடித்து சிதறிய ஜப்பானிய ஏவுகணை..!

ஜப்பானிய தனியார் நிறுவனமொன்றினால் இன்று ஏவப்பட்ட ரொக்கெட் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவைத் தளமாக் கொண்ட ஸ்பேஸ் வன் (Space One) எனும் நிறுவனத்தின் Kairos எனும் ரொக்கெட், வாகாயாமா பிராந்தியத்திலுள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஏவுதளத்திலிருந்து இன்று காலை ஏவப்பட்டது. 18 மீற்றர் நீளம் கொண்ட இந்த ரொக்கெட்டில் ஜப்பானிய அரசின் சிறிய சோதனை...
- Advertisement -

Latest News

இலங்கையின் இரண்டாவது பாரிய குடிநீர் திட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பம்

அனுராதபுர வடக்கு குடிநீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று(10) ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள சுமார் 67,000...