Saturday, July 11, 2026
No menu items!

News Line

தேரர் ஒருவர் படுகொலை…!

ஜனவரி 23 ஆம் திகதி, கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹட்டன கனராம விகாரையில் பணிபுரிந்த கலப்பலுவ தம்மரதன தேரரை காரில் வந்த குழுவினர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் 32 வயதான நபரை நேற்று (11)  ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கமைய, முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணையின் அடிப்படையில் அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து...

வவுனியா பாடசாலையொன்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு…!

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் நேற்றையதினம்(11) குப்பை குழியை துப்பரவு செய்த போது அங்கு வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் மோட்டார் குண்டுகளை மீட்டனர். இவ்வாறு மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின்...

பால் மா விலை குறைப்பு..!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் கிலோ ஒன்றிற்கு 100 - 150 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 15 ஆம் திகதி முதல் இந்த விலைக்குறைப்பு அமுழுக்கு வருமென அவர் மேலும் தெரிவித்தார்.

கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்த கொடூர கணவன்..!

கொழும்பில்  பிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் தாக்கி கருவை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் கணவர் மனைவியின் வயிற்றில் காலால் தாக்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மேலும் மனைவி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு மாத கரு கலைந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன்  சந்தேக நபரை...

யூபி வாரியர்ஸ்சை வீழ்த்திய குஜராத் ஜயண்ட்ஸ் அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் யூபி வாரியர்ஸ் (UPwarriorz) மற்றும் குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants) ஆகிய அணிகள் அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants)) அணி 08 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants) அணி...

அமெரிக்க விமான விபத்தில் 5 பேர் பலி..!

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம், ஹாட் ஸ்பிரிங்ஸ் நகரின் இங்கல்ஸ் பீல்டு விமான நிலையம் அருகே சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமானம் ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நிலையில்...

மரதன் ஓடி பரிதாபமாக உயிரிழந்த மாணவன்..!

அம்பாறை - திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை மரதன் போட்டியில் பங்கேற்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதுடன், மாணவனின் மரணம் குறித்து இன்றைய தினம் (12) அதிகாரிகளை அழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்துள்ளார். பாடசாலை இல்ல...

குடும்பஸ்தரை கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல்..!

வட்டுக்கோட்டை - மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் நேற்றையதினம்  வாள்வெட்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை - மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்துள்ளனர். இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை...

தாமரை கோபுரத்தில் நடந்த சோகம்..!

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர். ஹெட்டியாராச்சி ரசாங்கிகா ருக்ஷானி என்ற 27 வயதுடைய பெண்ணும், சமிந்து திரங்க பெர்னாண்டோ என்ற 22 வயதுடைய இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த போதை மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் சுகவீனமடைந்த இருவரும்...

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு..!

அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியவில் நேற்று (10) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் 24 இலட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும். எதிர்வரும்...
- Advertisement -

Latest News

இலங்கையின் இரண்டாவது பாரிய குடிநீர் திட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பம்

அனுராதபுர வடக்கு குடிநீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று(10) ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள சுமார் 67,000...