Friday, July 10, 2026
No menu items!

News Line

2024 IPL போட்டிகளை இலங்கையில் நடாத்த முயற்சி

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் சில போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளரிடம் தாம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை ஒன்றை விடுத்ததாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை...

மாலைத்தீவு – இந்திய முறுகல் தொடர்கிறது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் வகையில் சமூக ஊடகங்களில் அறிக்கைகளைப் பதிவிட்ட மூன்று அமைச்சர்களை மாலைத்தீவு அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இச் சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான முறுகல் ஏற்பட்டுள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்களான மல்ஷா ஷெரிப், மரியம் ஷியூனா, அப்துல்லா மஹ்சூம் மஜிட் ஆகிய மூவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அமைச்சர் மரியம் ஷியூனா உள்ளிட்டவர்கள் இந்திய பிரதமர்...

ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தாவிட்டால், அவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பலான USS Carney நேற்று (13) காலை யேமனின் ரேடார் கட்டமைப்பை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. அத்துடன் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட கூட்டு இராணுவத்தினர் தற்போது ஹௌதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து 30-க்கும்...

யாழில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி – ஒருவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஒரு கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நபரை பொலிஸார், நேற்றைய தினம்(13) சனிக்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாண பொலிஸ் பிரிவை சேர்ந்த நபரை இத்தாலி நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக 23 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட...

திறைசேரியினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இந்த ஆண்டு தேசிய தேர்தல்கள் நடைபெறவிருப்பதானால், அனைத்து அமைச்சக செயலாளர்கள் மற்றும் பிற அரசு நடத்தும் நிறுவன தலைவர்களுக்கு செலவுகளை கட்டுப்படுத்துமாறு திறைசேரியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக திறைசேரியின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதன்படி, மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை, பொருட்கள் மற்றும் உபகரணங்களை விநியோகிப்பதற்கோ அல்லது தெரிவு...

விஜயகாந்தின் நினைவிடத்தில் சாணக்கியன்

தென்னிந்திய நடிகர் மற்றும் தே.மு.தி.கவின் முன்னாள் தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேற்றைய தினம் (13.01.2024) சாணக்கியன் நேரில் சென்றுள்ளார். கோவிட் தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி...

12 இலட்சம் வருமானம் பெறும் இலங்கையர்களுக்கு நிதி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில்,அதற்கு தேவையான தீர்வுகளை எங்களால் மேற்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க  அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் போதே இதனைத் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஒரு நாடாக, நாம் மிகவும் கடினமான முடிவுகளை எடுத்துள்ளோம். இன்று நாடு ஒரு...

அனைத்து தேர்தல்களுக்குமான திகதிகள் வெளியானது.

ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை  மார்ச் மாதத்திலும் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிடப்படவுள்ளதுடன்  பரந்துபட்ட அரசியல் கூட்டணியில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை...

பல பகுதிகளில் இன்று 16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இன்றைய தினம் (13) இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர் விநியோகத் தடை...

கா பொ த உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

2023 ம் ஆண்டிற்கான கா பொ த உயர்தர பரீட்சைகளில் கடந்த 10 ஆம் திகதி புதன் கிழமை நடைபெற்ற தொகுதி பாடங்களில் ஒன்றான விவசாய விஞ்ஞான பாடத்தின் 2 ஆம் பகுதி வினாத்தாள் மூன்று மொழிகளிலும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவசாய விஞ்ஞான பகுதி 2 க்கான புதிய பரீட்சை திகதி...
- Advertisement -

Latest News

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன!

இலங்கையின் வைத்தியத்துறை வரலாற்றில் ஒட்டிப்பிறந்த 5 வயது இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனை பாராட்டுக்களை பெற்றுவரும் அதேவேளை, நாட்டின் அரச சுகாதார துறையின் திறன்கள்...