Saturday, July 18, 2026
No menu items!

News

பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை..!

ஏப்ரல் மாதம் முதல் கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி நிர்வாகத்தின் ஊடாக மறுசீரமைப்பிற்கான குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில், 1 - 5 வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகள் தொடக்கப் பாடசாலைகளாக வகைப்படுத்தப்படும். அத்துடன் 6 - 10 வரையான...

ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

தமிழக கடற்றொழிலாளர்களின் நலனைக் காக்கத் தவறிய அரசாக மோடி அரசு செயற்பட்டு கொண்டிருக்கிறது என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கைது, அபராதம், படகுகள் பறிமுதல் என மோடி ஆட்சியில் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை அரசு...

இலங்கையில் அதிகரித்த எச்.ஐ.வி ..!

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.

பலத்த பாதுகாப்பில் தேவாலயங்கள்..!

இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது. கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற நாள். இதற்கமைய, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், விசேட...

கனடாவில் நோய்த்தாக்கம் மக்களுக்கு எச்சரிக்கை ..!

கனடாவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவுகை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார். மேலும்,நாடு முழுவதிலும் இந்த வருடம்,தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இந்த வருடம் மாத்திரம் நாட்டில் 40 தட்டம்மை நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே...

வெளிநாட்டில் மனைவி – கொழும்பில் கணவன் எடுத்த விபரீத முடிவு..!

கொழும்பின் புறநகர் பகுதியான ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையொருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். 25 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில்  மனைவி இருந்துவந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட  தகராறு காரணமாகவே குறித்த நபர்  வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக கணவன் - மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு...

இலங்கையின் பணவீக்கத்தில் பாரிய மாற்றம்..!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் குறைந்துள்ளது. கடந்த மாதம் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்த இலங்கையின் பணவீக்கம், மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், பெப்ரவரியில் 3.5 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதேவேளை, பெப்ரவரியில் 7 சதவீதமாக இருந்த உணவு பொருள் அல்லாத பணவீக்கம் மார்ச்...

அதிர்ச்சியளித்த நீதிமன்ற தீர்ப்பு..!

500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ்  சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றுள்ளார். நீண்ட விசாரணையின் பின்னர் குற்றவாளி என நீதிபதி பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையும், 20ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

பறவையையும் நாயையும் பிரித்த வனவிலங்கு துறை அதிகாரிகள் -மீண்டும் சேர்க்குமாறு மக்கள் வேண்டுகோள்..!

அவுஸ்திரேலியாவில் இன்ஸ்டகிராமில் பிரபலமான மக்பை பறவையை வனவிலங்கு காப்பகத்தினர் அதனை வளர்த்தவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ள நிலையில் அந்த பறவையை மீண்டும் அந்த குடும்பத்திடம் ஒப்படைக்கவேண்டும் என குயின்ல்ஸாந்து பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குயின்ஸ்லாந்தை சேர்ந்த தம்பதியினர் மொலி என அழைக்கப்படும் மக்பையை குஞ்சுப்பருவத்தில் மீட்டெடுத்து வீட்டில் வளர்த்து வந்தனர் . அந்த வீட்டில் உள்ள பெகி எனப்படும் புல்டெரியர்...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு..!

வவுனியாவில் இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று தெரிவித்தனர். ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிப்பிரியா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள தனது வீட்டில்  இந்த  இளம் யுவதி  தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டதாக  சிதம்பரபுரம் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த யுவதியின் சடலம் இன்று காலை...
- Advertisement -

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...