Saturday, July 18, 2026
No menu items!

News

சிறைச்சாலைக் கைதிகள் இருவர் தப்பியோட்டம்..!

அநுராதபுரம்  திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள் நேற்று (29)  தப்பிச் சென்றுள்ளனர். இந்த இரு கைதிகளும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட சிறைச்சாலை சிற்றூண்டிச்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். இருவரும் தங்களின் சிறைச் சீருடைகளை களைந்துவிட்டு சிவில் உடைகளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்ய அநுராதபுரம் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தப்பியோடிய...

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல்..!

வைரஸ் காய்ச்சல் 12 வயதிற்கு குறைந்த சிறுவர்களிடையே பரவுவது தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த தகவலை  கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிறுவர்களின் முகம் மற்றும் கைகளில் சிறிய கொப்புளங்கள் ஏற்படலாம். மேலும் நோய்த் தாக்கத்திற்கு உள்ளான...

இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை!

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பயங்கர சம்பவம் லுணுகம்வெஹர, பஞ்சி அப்புஜந்துர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் லுனுகம்வெஹர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் அட்டகாசம்..!

திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபரொருவர், மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார். இச் சம்பவத்தில்  அக்போபுர -85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சிரோமாலா பெர்ணாந்து என்ற மனைவி உயிரிழந்தததுடன், கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த சந்தேகநபரை, வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள்...

யாழில் தனியாக வசித்து வந்த நபர் திடீர் மரணம்..!

யாழ் இளவாலை பகுதியில்47 வயதுடைய ஐயங்கன் சிவானந்தராஜா குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்களை விட்டு பிரிந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது குடிசைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து குறித்த குடும்பஸ்தர் நேற்றையதினம்(29) சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்...

மொட்டு அணியினர் தங்காலையில் ஒன்றுகூடவுள்ளனர்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மாநாடு இன்று (30) தங்காலை நகரில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், பராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். எதிர்வரும்...

‘வெல்வோம் சிறிலங்கா’ நடமாடும் சேவை வவுனியாவில் முன்னெடுப்பு…!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால்  " நானே ஆரம்பம்  வெல்வோம் சிறிலங்கா ஸ்மார்ட் சூரன்களோடு " வவுனியாவிற்கு ஸ்மார்ட் எதிர்காலம்  எனும் தொணிப்பொருளில் நடாத்தும் நடமாடும் சேவை வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் நேற்றைய தினம் (29) ஆரம்பமாகியிருந்தது. வெளிநாட்டுவேலைவாய்ப்புகள்,வெளிநாடுகளில்பணிபுரிவோரின்முறைப்பாடுகளைபொறுப்பேற்றல்,தொழில்வங்கியில்பதிவுசெய்தல்,வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கு உரிய நஷ்டஈடு / சம்பளம் / காப்புறுதி தொடர்பான சேவைகள் ,...

பேருந்து விபத்தில் 45 பேர் பலி..!

தென்னாப்பிரிக்காவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 45 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் எட்டு வயதுடைய  சிறுமி ஒருவரே  உயிர் பிழைத்துள்ளதோடு  பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போட்ஸ்வானாவின் தலைநகர் கபோரோனில் இருந்து மோரியா நகரில் ஈஸ்டர் வழிபாட்டுக்கு சென்ற பக்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். லிம்போபோ மாகாணத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாலத்தின்...

தொடர்ந்து வெற்றியை பதிவு செய்யும் ராஜஸ்தான்..!

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை...

கணவன் வெளியில் சென்ற நிலையில் வீட்டிலிருந்த பெண் படுகொலை..!

கடுவெல, கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீடொன்றில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டிலுள்ள அனைவரும்  வேலைக்குச் சென்ற நிலையில், குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந் நிலையிலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பெண்ணின் தலையின் பின்புறத்தில் ஒரு பெரிய காயம் மற்றும்...
- Advertisement -

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...