Friday, May 29, 2026
No menu items!

News

திருகோணமலை கடற்கரையில் தொடர்ச்சியாக குவியும் வெளிநாட்டு குப்பைகள்  

திருகோணமலை கடற்கரையோரத்தில் தற்போது அதிகளவு குப்பைகள் குவிந்து வருவதாகவும், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை  நேற்றைய தினம் (11) தெரிவித்துள்ளது. தற்போது கடற்படை மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியை திருகோணமலை மாநகர சபை மேற்கொண்டு...

தமிழரசுக் கட்சி தலைமை தெரிவுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடார்த்த முடிவு

இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் பதவிக்காக போட்டியிடும் மூவரும் விட்டுக்கொடுப்பு இல்லாததால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தெரிவு செய்வதென நேற்று(11) முடிவுசெய்யப்பட்டுள்ளது. இப்பதவிக்கு போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பியோகேஷ்வரன் மூவரும் நேற்று (11) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெல, சிறிதரனின் விடுதியில் கூடி பேசியுள்ளனர். புதிய...

30 வீதத்தினால் மருந்துப்பொருள் விற்பனையில் வீழ்ச்சி

தற்பொழுது நாட்டில் மருந்துப்பொருட்களின் விற்பனை சுமார் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள்  சங்கத்தின் தலைவர் சந்திக்க சான்கந்த தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மிகவும் அத்தியாவசியமான மருந்து வகைகளை மட்டுமே கொள்வனவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு கொள்வனவு செய்யும் மருந்து வகைகள் ஒரு நாள் அல்லது இரண்டு...

மாற்றுக் கருத்துடையவர்களை அடக்குவதற்கே பயங்கரவாத திருத்தப்பட்ட சட்டமூலம் : விஜித ஹேரத் சுட்டிக்காட்டு

கடந்த புதன் கிழமை  நாடாளுமன்ற அமர்வில்  இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் வடக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன்? தவறான தீர்மானங்களே இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டியது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , அத்துடன் மக்கள் வீதிக்கு இறங்கும் போது...

அரச சொத்தில் நடுக்கடலில் ராஜபக்சக்கள் நடத்திய ஆடம்பர விருந்து!

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸ உட்பட பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்தபோது உபசரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த விருந்து ஏற்பாடுகள் குறித்து வெளியான செய்திகளை இலங்கை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது. கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் விமானப் போக்குவரத்து...

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் பலி – கொழும்பில் சம்பவம்

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம்(11) 48 வயதுடைய நபர்  ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த நபரின் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன்...

இன்றும் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

இன்று முதல் வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது . கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் . தீவின்...

உலகிலேயே மிக மெதுவாக வாகனங்கள் இயக்கப்படும் நகரம் 

உலகிலேயே வாகனங்கள் மிக மெதுவாக இயக்கப்படும் நகரமாக லண்டன் பதிவாகியுள்ளது. இதன்படி, மத்திய லண்டனில் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 37 நிமிடங்கள் 20 நொடிகள் ஆகுமென கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 55 நாடுகளில் 387 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் மையத்தில் மணிக்கு 50 மைல் தாண்டி வாகனங்களை இயக்க முடியாது...

கடும் பொருளாதார நெருக்கடி : எரிபொருள் விலையை பாரியளவில் அதிகரித்த நாடு

பெப்ரவரி 1ஆம் திகதி முதல்  எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு திட்டமிட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளதாகவும், எரிபொருள் விலையை தவிர, மின் கட்டணத்தையும் 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும் எனவும் கியூபா அரசு தெரிவித்துள்ளது. அத்துடன்,அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளினால்  11 மில்லியன்...

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியை காண இலவச வாய்ப்பு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியை இலவசமாக காணும் வாய்ப்பு கிரிக்கட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், இன்று (11) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் C&D பிரிவுகள் இவ்வாறு பார்வையாளர்களுக்காக இலவசமாக திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், T20 போட்டியைக் காண www.srilankacricket.lk மற்றும் பிரேமதாச மைதானத்தில் உள்ள இலங்கை கிரிக்கெட் கரும பீடத்தில்...
- Advertisement -

Latest News

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 464 வெசாக் தானசாலைகள் பதிவு!

கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள் இதுவரையில் 464 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார ஆய்வாளர் தெஹான் விதானகே...