Thursday, May 28, 2026
No menu items!

News

தொலைக்காட்சி நிலையத்தை முடக்கிய ஆயுததாரிகள்

ஈக்வடரின் மிகப்பெரிய நகரமான குவாயாகுவில் உள்ள  தொலைக்காட்சி நிலையமொன்றை நேற்றைய தினம் (09)நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியொன்று நடைபெற்று கொண்டிருந்த வேளையில்  ஆயுதமேந்திய குழுவொன்று  தாக்கியுள்ளதுடன் ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர்களையும், அதில் கலந்து கொண்டவர்களையும் குறித்த குழுவினர் மிரட்டுவதும், துப்பாக்கியை காட்டி மிரட்டி பணயக் கைதிகளாகப்...

தொழிற்சங்க நடவடிக்கையால் சுகாதாரசேவைகள் ஸ்தம்பிதம்!

அரச தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று (10) 48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் பல்வேறு சுகாதார சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளது. மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய்கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி  நாடளாவியரீதியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள்  இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறைபோராட்டம் இன்றும் நாளையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெறுமதிசேர் வரி...

இலங்கையின் குரங்கு இறக்குமதி தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு

நேற்றைய தினம் (09.01.2024) இடம்பெற்ற  நாடாளுமன்ற அமர்வில்  அமைச்சர் மகிந்த அமரவீர  உரையாற்றும் போது இலங்கையிலிருந்து குரங்குகளை இறக்குமதி செய்வதில் சீனா இன்னும் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ”என்னுடைய சமீபத்திய சீன விஜயத்தின் போது அங்கிருந்த தனியார் மிருகக்காட்சி சாலைகள் இலங்கையிடம் இருந்து குரங்குகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளது. சீனா...

36,385 பட்டதாரி ஆசிரியர்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்

தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 36 ஆயிரத்து 385 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக  நேற்றைய தினம்(09) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், 14,385 மாகாண மட்ட ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பிலும் மேலும் 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பது...

இன வன்முறையால் பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள இலங்கை

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (9) இடம்பெற்ற அமர்வில் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதில் பௌத்த பிக்குகள் தடையாக உள்ளார்கள் என்ற தவறான நிலைப்பாடு சர்வதேசத்தின் மத்தியில் காணப்படுவதாக நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அனைத்தையும் எதிர்க்கும் ஒரு சில பிக்குகளினால் இந்த நிலை காணப்படுகிறது. தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபித்து தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு மகாநாயக்க...

பிரான்ஸ் நாட்டின் இளம் பிரதமராக கேப்ரியல் அட்டல்

பிரான்ஸ் நாட்டின் கல்வித்துறை அமைச்சராக இருந்த  கேப்ரியல் அட்டல்  (GabrielAttal)  அதிபர் இமானுவேல் மேக்ரானால் நேற்றைய தினம் (09) பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் வரலாற்றில் 34 வயது இளம் பிரதமர் என்ற அந்தஸ்தை கேப்ரியல் அட்டல் பெற்றிருக்கிறார். எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக நேற்றைய தினம் (09) எலிசபெத் போர்ன்  பதவி விலகியதை தொடர்ந்து  அவருக்கு...

இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ள பிரித்தானிய இளவரசி

பிரித்தானிய இளவரசி அன்னே பிரின்ஸஸ் ரோயல் (Anne, Princess Royal) இன்று (10) 5 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே, இவர் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இளவரசி அன்னே நாளை (11) வட மாகாணத்திற்கு...

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஜப்பான் நிதியமைச்சர்

ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி எதிர்வரும் ஜனவரி 11 மற்றும்12 ஆம் திகதிளில் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சர் சுசுகி ஷுனிச்சி மற்றும் அவரது குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு R. பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. சிம்பாவே அணி 44.4 ஓவர்களில் 208 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில்...

தாய்வான் மக்களின் முடிவை மதிக்க சீனாவுக்கு உத்தரவு

சீனாவுடனான உறவானது மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வென் தெரிவித்துள்ளார். தாய்வானானது     சீனாவுடன் ஒன்றிணைவது தவிர்க்க முடியாதது என்று சீனத் தலைவர் தெரிவித்துள்ள பின்புலத்தில் தாய்வான் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. சீனாவுடனான உறவுகளைப் பேணுவதற்கு ஜனநாயகக் கொள்கை மிக...
- Advertisement -

Latest News

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 464 வெசாக் தானசாலைகள் பதிவு!

கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள் இதுவரையில் 464 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார ஆய்வாளர் தெஹான் விதானகே...