Thursday, May 28, 2026
No menu items!

News

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன்  ஒருவர் நேற்றைய தினம் (08) உயிரிழந்துள்ளார். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வவுனியா -பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த...

இன்றும் நாளையும் மழையுடனான வானிலை

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் நாளையும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடு. அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை...

முதலாவது இடத்திற்கு முன்னேறியது அவுஸ்ரேலியா

2023- 2025 ஆம் ஆண்டுகளுக்கான ஐசிசி டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி மீண்டும் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3- 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றிதன் மூலம் 54 புள்ளிகலுடன் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், இந்திய அணி 26 புள்ளிகளுடன் இரண்டாவது நிலையில் உள்ளது. தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து...

மாலைத்தீவு கடற்பரப்பில் எண்ணெய் கப்பல்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல்

மாலைத்தீவு  கடற்பரப்பில் இஸ்ரேலுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன. மாலைத்தீவின் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்பிலேயே இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த எண்ணெய் கப்பல்கள் பப் அல் மன்டாப் நீரிணை மற்றும் செங்கடலை கடந்து பயணிக்க திட்டமிட்டிருந்தது  என தகவல்கள் வெளியாகியுள்ளன. பப்...

பங்களாதேஷ் பொதுத்தேர்தல்: பிரதமர் 5 ஆவது முறையாக மீண்டும்

பங்களாதேஷில்  நடைபெற்ற இவ்வாண்டு தேர்தலில் அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷின் பிரதமர் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது முறையாக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவருடைய கட்சி பிரதான எதிர்க்கட்சியான பி.என்.பியிடமிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றியைப் பெற்றுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன?

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஐக்கியமக்கள் சக்தி கட்சியானது ஆராயவுள்ளது. இது தொடர்பான கட்சியின்கூட்டம் இன்று (08) இடம்பெறவுள்ளது. மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான  ரஞ்சித் மத்துமபண்டார பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் இச் சட்ட திருத்தங்கள் குறித்து...

தமிழர் பகுதியில் கிணற்றுக்குள் இருந்து வரும் மண்ணெண்ணெய்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணெய் வெளியேறி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த விடயம் நேற்று (07) கண்டறியப்பட்டுள்ளதாக உடையார் கட்டு கிராம சேவையாளர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று மழை வெள்ளத்தினால் கிணறுக்குள் வெள்ள நீர் நிரம்பியுள்ள...

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை விஜயம் .

நாட்டின் சமகால பொருளாதார நிலவரம் தொடர்பில் மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்  குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர். நாட்டின் அண்மையகால பொருளாதார நிலவரம் குறித்தும், சர்வதேச நாணய நிதியத்தினால் வலியுறுத்தப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டங்களின் அடைவுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்தும் மதிப்பீடு செய்வதற்காகவே இக்குழு வருகைதரவுள்ளது என நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர்...

இலங்கையின் 15 ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 15 ஆவது சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பானது இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளதாக  அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கொழும்பு மாவட்டச் செயலாளர் கே.ஜி. விஜேசிறி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த கனக்கெடுப்பானது  எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. நாடு முழுவதும் மக்கள்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்புத்...

பிரபல நடிகையை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த ஆட்டோ சாரதி!

ஜாலியகொட பகுதியில்  ஆட்டோவில் சென்று கொண்டிருந்த  23 வயதுடைய பிரபல நடிகை ஒருவரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்துள்ளதாக குறித்த நடிகை பிலியந்தலை பொலஸ்நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளார். மேலும் மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்திலிருந்து முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென முச்சக்கரவண்டியை  வீதிக்கு அருகில் நிறுத்தி, தொழில்நுட்ப கோளாறை சரிபார்ப்பதாக கூறிய சாரதி,...
- Advertisement -

Latest News

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 464 வெசாக் தானசாலைகள் பதிவு!

கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள் இதுவரையில் 464 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார ஆய்வாளர் தெஹான் விதானகே...