Saturday, July 11, 2026
No menu items!

Updates

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சடலமாக மீட்பு.!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராஜகிரிய பகுதியிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டிலேயே திடீர் சுகயீனம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  நீதவான் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் ஜனாதிபதி..!

வடமாகாண மக்களுக்கான உரிமய திட்டத்தின் கீழ் 5000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது என குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து  கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில்...

கியூபாவுக்கு எதிரான தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரும் இலங்கை!  

அமெரிக்காவினால் (America) வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை (Cuba) நீக்கம் செய்யக் கோரும் பிரகடனத்திற்கு இலங்கை ஜனநாயக ஒன்றியங்களின் கூட்டுக் குழு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. கியூபாவை தன்னிச்சையான பட்டியலில் சேர்ப்பது அரசியல் நோக்கங்களைக் கொண்டுள்ளதோடு கியூபா மக்களுக்கு கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.

மர்மான முறையில் தந்தை, மகன் மரணம்!!!

கம்பளை புப்புரஸ்ஸ நகரில் நேற்றைய தினம் தானம் வழங்குவதற்காக சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த தந்தையும் மகனும் அதிகாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் மின் பிறப்பாக்கி செயலிழந்தமையால் சமையல் வேலைகளை நிறுத்திவிட்டு  அவ் அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளனர். இந்த நிலையில் கரப்பான் பூச்சிகள் அவர்கள் மீது திரிவதை கண்டு சக நண்பர்கள் அவர்களை எழுப்பியபோது இருவரும் அசைவற்று இருந்துள்ளனர். இதற்கமைய...

இன்றைய வானிலை: தொடரும் மழை ….

தென்மேல் பருவப்பெயர்ச்சியின் காரணமாக  நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையையும் தொடரக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின்  சில இடங்களிலும் 150 மில்லிமீற்றர் வரையிலான பலத்த...

ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்..

நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற வெளியேற்றல் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையில் போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனை தொடர்ந்து  அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்டவீரருமான  தினேஷ் கார்த்திக்,தனது ஓய்வை அறிவித்திருந்தார். தனது விக்கெட் கீப்பிங்...

அக்காவின் காதலனால் 14 வயது சிறுமி தூஸ்பிரயோகம்!!!

கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் அக்காவின் காதலனால்  பாலியல்துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த  சிறுமியே இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்   118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து குறித்த தகவல் பொலீஸாருக்கு பரிமாறப்பட்டு, கிளிநொச்சி பொலீஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த விடயம்தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி மாவட்ட...

திருவிழா தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்….

யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவினை எதிர்வரும் ஜீன் 07ஆம் திகதி தொடக்கம் ஜீன் 22ஆம் திகதி வரை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், திருவிழாக் காலங்களில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை...

மின் விநியோகம் பாதிப்பு – பெரும் சிரமத்தில் மக்கள்…!!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அதிகளவான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த 3 நாட்களில் 36,900 மின் கம்ப சேதங்கள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக 300,000இற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகம் வழங்குவது...

தடுப்பூசி செலுத்திய நபர் மரணம்!!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தடுப்பூசி செலுத்திய பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் கொழும்பு  தேசிய வைத்தியசாலையின் 17வது அறையில் தீக்காயங்களுக்குள்ளாகிய நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு செபிரொக்சிமி (Cefuroxime) என்ற தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அந்த நபர் உயிரிழந்ததாகவும் அவர் 31...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...