Cordelia Cruise Lines செப்டம்பர் 2024 இல் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் (HIP) தனது இரண்டாவது சீசன் அழைப்புகளை நிறைவு செய்துள்ளது.
ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் திட்டமிடப்பட்ட 6 வருகைகள் நாட்டிற்கு 5000 சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வந்தன.
அடுத்த சீசன் கார்டெலியா பயணங்கள், HIP இல் 6 அழைப்புகள் இருக்கும், இது ஜூன் 2025 இல் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும்.
இந்திய மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு விடுமுறைப் பொதிகளை வழங்கும் Cordelia Cruise Lines, ஜூன் 2023 இல் சென்னையிலிருந்து இலங்கைக்கான பயண அழைப்புகளை ஆரம்பித்தது, இன்றுவரை துறைமுகத்தில் 16 அழைப்புகளைச் செய்துள்ளது.
HIP இன் செயற்பாடுகளுடன் உல்லாசக் கப்பல்களின் ஒருங்கிணைப்பு சர்வதேச சுற்றுலாத்துறையில் துறைமுகத்தின் பங்கை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி, பார்வையாளர்களின் நிலையான வருகையை ஈர்ப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பங்களிக்கிறது என்று ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் தெரிவித்துள்ளது.








