லாஃஸ்  எரிவாயுவைப் பயன்படுத்தும் உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அரிசி, பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின் விலை நேற்று இரவு (07) முதல் 25 ருபாய்அதிகரிக்கப்பட்டுள்ளது என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷன் கூறியுள்ளார்.

எல்பிஜி (லாஃஸ்) எரிவாயு விலை அதிகரிப்பால் அதனை பயன்படுத்தும் சுமார் 25%–30% உணவகங்களும் சிறிய உணவகங்களும் நிதி நெருக்கடியில் இருப்பதால், இந்த விலை மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, எரிவாயுவில் இயங்கும் உணவு விற்பனை நிலையங்களில் ஒரு கோப்பை சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவாகவும் அதே நேரத்தில் பால் தேநீரின் விலை 10 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிற்றுண்டிப் பொருட்களின் விலையிலும் 5 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் முட்டை ரொட்டி மற்றும் பரோட்டாவின் விலைகளில் மாற்றம் இல்லை என்று ருக்ஷன் கூறினார்.

LAUGFS எரிவாயு விலையில் ஏற்பட்ட கடுமையான உயர்வைத் தொடர்ந்து இந்த விலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

LAUGFS எரிவாயுவின் 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 545 அதிகரித்து ரூ. 6,245 ஆக அதிகரித்துள்ளது, 5 கிலோ சிலிண்டரின் விலையும் 220 ரூபாய் அதிகரித்து 2,500 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் நிலவும் பரந்த அளவிலான ஏற்ற இறக்கங்கள் மற்றும் இறக்குமதி செலவுகளைப் பாதிக்கும் தொடர்ச்சியான அந்நிய செலாவணி அழுத்தங்களைத் தொடர்ந்து இந்த விலைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here