ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்குமாறு, கட்சி உறுப்பினர்களும், தொண்டர்களும் தொடர்ந்து அழைப்பு விடுத்துவரும் நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்கர் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளார்.
அண்மையில், எஸ்.ஜே.பி. தொண்டர்கள் குழு ஒன்று நேரிலாக அவரது இல்லத்திற்கு சென்று, கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து இவர் விலகிய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளனர்.
இதையடுத்து கருத்து வெளியிட்ட பக்கீர் மார்கர், “இவர்களது அழைப்பு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கின்றேன். எனினும், இந்த ஆண்டு மார்ச் மாதம் நான் எடுத்த தலைமை பதவியிலிருந்து விலகும் முடிவில் இதுவரை மாற்றம் எதுவும் இல்லை” என்று வலியுறுத்தினார்.








