Tuesday, April 28, 2026
No menu items!

பதவி

COPA குழு தலைவர் பதவி வெற்றிடம்: செப்டம்பர் 12ல் புதிய தலைவர் தேர்வு!

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவர் பதவி தற்போது வெற்றிடமாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நேற்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குறித்த பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுவதற்கான ஒப்புதலின்படி தான் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கமைய, செப்டம்பர் 12 ஆம் திகதி புதிய...

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பரிந்துரை – விசாரணைக் குழுவின் ஒருமனத் தீர்மானம்!

தேசபந்து தென்னகோனைப் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரித்த குழு, அவர் குற்றவாளி என ஒருமனதாக முடிவு செய்து, அவரை அவரது பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பான முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இவ்வறிக்கையின் அடிப்படையில், அதிகாரபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SJB தலைவர் பதவிக்கு திரும்புமாறு அழைப்பு; இம்தியாஸ் பக்கீர் மார்கர் !

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்குமாறு, கட்சி உறுப்பினர்களும், தொண்டர்களும் தொடர்ந்து அழைப்பு விடுத்துவரும் நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்கர் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளார். அண்மையில், எஸ்.ஜே.பி. தொண்டர்கள் குழு ஒன்று நேரிலாக அவரது இல்லத்திற்கு சென்று, கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து இவர்...

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக ; மேதகு எஸ்.முரளிதரன்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இன்று மேதகு எஸ்.முரளிதரன் அவர்கள் பதவியேற்றுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை இன்றைய தினம் பிரதம அலுவலகத்தில் பிரதமரிடம் இருந்து பெற்றுக்கொண்டாரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img