Saturday, June 27, 2026
No menu items!

கிளிநொச்சி

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நாளை 4 ஆம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி அந் நாளில் கிளிநொச்சி நகரில் போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளனர். மேலும், போராட்டத்திற்கும் பேரணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது எனவும்  அக்கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு செய்தி  விடுத்துள்ளார் . மேலும் இந்நிலையில் யாழ்...

கிளிநொச்சியில் பஸ் – வேன் விபத்து  

கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இன்று  (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று , வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதியதுடன்  எதிரே...

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன்  ஒருவர் நேற்றைய தினம் (08) உயிரிழந்துள்ளார். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வவுனியா -பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று (22) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி(01.02.2024) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன்...

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பாதுகாப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்திட்டம் முன்னெடுப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Global Max Networks (Pvt) Ltd நிறுவனத்தால் பல்வேறு உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தின்  கண்டாவளை, பெரியகுளம், முரசுமோட்டை பகுதிகளில் உள்ள நலன்புரிநிலையங்களுக்கு இந்த  உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த உதவித்திட்டத்தை நேற்று (19) Global Max Networks (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் நேரடியாக சென்று நிலையங்களுக்கு பொறுப்பானவர்களிடம் பொருட்களை கையளித்தார். கிளி/கண்டாவளை மகாவித்தியாலய...

ஜனவரியில் வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி..!

வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டமானது  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இது தொடர்பாக தெரிவித்தார். வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர்...

இன்றும்  தொடரும் மழையுடனான  வானிலை

தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். தீவின் பிற பகுதிகளில் மதியம் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய...

கிளிநொச்சியில் 47 kg கஞ்சா – 44 வயதுடைய சந்தேகநபர் கைது !

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் வீடொன்றினுல் கஞ்சாவை மறைத்து வைத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, நேற்று (06.11.2023)இரவு சோதனை மேற்கொண்ட பொலிஸார் 47 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதுடன், சந்தேசத்தின் பேரில் 44 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடந்தும் விசாரணை...
- Advertisement -spot_img

Latest News

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான...
- Advertisement -spot_img