இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு!
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (17) பிற்பகல் 2:00 மணியளவில், வலையை எறிந்து கொண்டிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில், சாந்தபுரத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பிச்சை துரைராசா என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்திக் குழுக்கூட்டம்!
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக் கூட்டமானது கரைச்சி பிரதேச செயலாளர் திரு முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கரைச்சி பிரதேச சபையில் தவிசாளர் அருணாசலம் வேல மாளிதன் பிரதேச சபையின் உறுப்பினர்கள் போலீசார்
கா/பொ/த சாதாரண தரப் பரீட்சையில் கிளிநொச்சி மகாவித்தியாலயம் மாவட்டத்தில் முதலிடம்!
2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட இரண்டு கல்வி வலயங்களில் செயல்படும் அனைத்து பாடசாலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, கிளிநொச்சி மகாவித்தியாலயம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பள்ளியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் பலர் சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க வகையில் 23 மாணவர்கள் 9A சித்திகளைப்
கிளிநொச்சி வலைப்பாடு பாடசாலையில் முதல் முறையாக 9A – வரலாற்று சாதனை படைத்த மாணவி!
தற்போது வெளியாகிய 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பெறுபேறுகளில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மிக முக்கியமான வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டுக்கு மேல் ஆன நிலையில், இப்பாடசாலையில் இருந்து முதன்முறையாக மாணவி அ. மேரி இசாயினி 9 பாடப்பிரிவுகளில் A தரங்களைப் பெற்று
செம்மணிப் போராட்டத்தில் குழப்பம்: அரசியல் இலாபத்துக்காக சிலர் இதை செய்கிறார்கள்– எம்.பி. க. இளங்குமரன் கண்டனம்!
செம்மணியில் இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல் இலாபங்களை பெறுவதற்காகவே சிலர் குழப்பங்களை விளைவித்திருந்ததாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமானது எனவும் அதனை திட்டமிட்டு குழப்புவதற்காக கிளிநொச்சியிலிருந்து குழுவொன்று செம்மணிக்கு அழைத்துவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மிக
கிளிநொச்சி பகுதியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பெளஷர்!
கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பெளஷர் ஒன்று தடண்புரண்டது. இச் சம்பவம் இன்று அதிகாலை 1.மணிக்கு இடம்பெற்றுள்ளது. முத்துராஜவெலவிலிருந்து காங்கேசன் துறை நோக்கி பூநகரி வீதியால் டீசல் ஏற்றி பயணித்த பெளசரே விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பெருமளவான டீசல் வெளியேறியதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். (கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)
கிளிநொச்சியில் தேசியக் கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்!
தேசியக் கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தை மேம்படுத்தும் நோக்கில் இன்று (12.06.2025) காலை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் வேதநாயகன் அவர்களும் கலந்து கொண்டுள்ளார். கலந்துரையாடலில் கூட்டுறவு செயற்த்திறன் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான அறிவுறுத்தல்கள் மாவட்ட ரீதியான கூட்டுறவு தலைவர்கள், முகாமையாளர்கள் மற்றும்
சட்டவிரோத மணல் அகழ்வு – நேரில் சென்று பார்வையிட்ட முக்கியஸ்தர்கள்..!
கிளிநொச்சி மாவட்டத்தின் குடமுருட்டி கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை (29.05.2025) மணல் அகழ்வு குறித்து பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் முறைப்பாடளித்துள்ளனர். இதனடிப்படையில் நேற்று வியாழக்கிழமை (29.05.2025)
வீதி பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்..!
கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அட்தியட்சகர் அவர்களின் தலைமையில் வீதி பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், போக்குவரத்து பொலிஸார் மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், முச்சக்கரவண்டி சங்க பிரதிநிதிகள், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். [கிளிநொச்சி
கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் கிராம அலுவலர் பிரிவு ரங்கன் குடியிருப்பு பகுதி மக்கள் தமது கிராமத்தின் வீதி மற்றும் பாலத்தினை புணரமைத்து தருமாறு கூறி கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது அவர்கள் தெரிவிக்கையில் கடந்த 2021ஆம் ஆண்டு முன்னைய அரசாங்கத்தினால் அப்பகுதியில் காணப்பட்ட சிறிய பாலத்தை உடைத்து