Wednesday, June 24, 2026
No menu items!

மேலதிக விசாரணை

சட்டவிரோதமான முறையில் 83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது!

கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆண் சந்தேக நபர் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும், பெண் சந்தேக...

தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு !

மாத்தளை, கோஹோலன்வல பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் அனுமதியின்றி பிரவேசித்து தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்த தென்னந்தோப்பில் காவலில் ஈடுபட்டிருந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், காயமடைந்த நபர் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காயமடைந்த நபரும் மற்றொரு நபரும் இன்று (02) அதிகாலை சுமார்...

முல்லைத்தீவில் சந்தேகத்திற்கிடமான முறையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 84 வயது வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண், மூங்கிலாறு பகுதியில் உள்ள வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அறிந்த மக்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை...

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கோரவிபத்து; இருவர் பலி!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி தருமபுரம் பகுதியை சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், கனரக டிப்பர் ஒன்றும், உந்துருளியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு!

பாணந்துறை - வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் நேற்று (27.08) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்ததாக சந்தேகிக்கப்படும் 2 நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்த நபர் அலுபோகஹவத்த பகுதியைச் சேர்ந்த...

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து; 11 பேர் காயம்!

தங்காலை, மஹாவெல பகுதியில் நேற்றைய தினம் (27.08) பிற்பகல் 2 பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளானதில், 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், தங்காலையில் இருந்து திக்வெல்ல நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த...

மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து; ஒருவர் பலி!

மத்தேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 342ஆம் வழித்தடத்தில் சல்கஸ் சந்திக்கு அருகில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி வீதியில் கவிழ்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தேவிந்த ருக்ஷன் என்ற 30 வயது இளைஞர் விபத்தில் படுகாயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில்...

கொழும்பு புறக்கோட்டையில் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்!

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் இன்று அதிகாலை 145 ஆம் இலக்க பேருந்து மார்க்கத்தில் தனியார் பேருந்து ஒன்று பழைய மீன் சந்தை அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தைக் மோதியதில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையின் கருத்தின்படி, பேருந்து ஓட்டுநர் நித்திரை கலக்கத்தில் இருந்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர், பேருந்து நிறுத்தத்தில்...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பாத பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 3,060 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசேட அதிரடிப்படை ஹொரணை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (6) பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கல்பாத பகுதியைச் சேர்ந்த...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

A9வீதி கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக நேற்றிரவு 8.30மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான கப்ரக வாகனம் வீதியை கடக்க முற்பட்டவர் மீது மோதியதியதிலேயே  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 55வயதான திருகோணமலையைச்சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img