Wednesday, June 24, 2026
No menu items!

மேலதிக விசாரணை

தனமல்வில-வெல்லவாய சாலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் காயம்!

தனமல்வில – வெல்லவாய வீதியின் கிதுல்கோட்டை பகுதியில் இன்று (03) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தனமல்வில நோக்கி சென்ற வேனின் 18 வயது சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த ஆறு பேரில்  56 வயதுடைய தம்புள்ளை...

A9 வீதியில் வாகன விபத்து: மூன்று பேர் காயம் !

A9 வீதியின் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து, கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் சென்ற லொறி ஒன்று மோதியதனால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்று பேர் காயமடைந்த நிலையில் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு...

கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம் – இருவர் காயம்!

கிளிநொச்சி, தட்டுவான்கொட்டி பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில், பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிகளை மேற்கொண்டு கொண்டிருந்த இருவர், தங்கள் பணியைச் செய்து கொண்டிருந்த போது நிலத்திற்குக் கீழ் புதையலாக இருந்த குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்பில் பலத்த காயமடைந்த இருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்...

பாதுக்க – கொடகம சந்தியில் பாரவூர்தி மோதி விபத்து: நால்வர் காயம்!

பாதுக்க – பொரளை வீதியில் கொடகம சந்திக்கு அருகில் இன்று (26) காலை சிறிய பாரவூர்தியுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்து ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மீகொட காவல்துறையினர் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணைகளின் படி, உணவு விநியோக பணியில் ஈடுபட்டிருந்த குழுவினரை நோக்கிச் சென்ற சிறிய பாரவூர்தி,...

தங்காலையில் 200 கிலோ போதைப்பொருள் 6 நவீன துப்பாக்கிகள் லொறியொன்றிலிருந்து பறிமுதல்!

தங்காலை பகுதியில் இடம்பெற்ற விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட லொறியொன்றிலிருந்து 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த லொறி, போதைப்பொருளுடன் தங்காலை பகுதியில் இயக்கப்படுகையில், பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் இதன்போது மேற்கொண்ட சோதனையின் போது, லொறியில் 6 நவீன துப்பாக்கிகள்...

தங்காலையில் மர்மமான மரணங்கள் – 2 சடலங்கள் ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

தங்காலை, சீனிமோதர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் இரண்டு பேரின் உடல்கள் இன்று (22) மீட்கப்பட்டுள்ளன. மரணமடைந்த இடத்தில் 'ஐஸ்' போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்றும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறை மேலதிக விசாரணைகளை...

குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவன் கைது!

மீரிகம பொலிஸ் பிரிவின் ரெந்தபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ரெந்தபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஆவார். பொலிஸார் தெரிவித்ததின்படி, குறித்த பெண் அவரது கணவரால் குடும்பத் தகராறின் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர். சடலம்...

விபத்துக்குள்ளான நோயாளார் காவு வண்டி; வவுனியாவில் சம்பவம்!

மன்னாரில் இருந்து வந்த நோயாளார் காவு வண்டி ஒன்று மாடு குறுக்கே வந்தமையால் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து செட்டிக்குளம் ஆண்டியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நோயாளர் காவு வண்டியில் நோயாளிகள் யாரும் இருந்திருக்கவில்லை என தெரிவிக்கபடுகிறது. சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார். இவ் விபத்து தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வழி மாறிச் சென்ற பயணி உயிர்மாய்ப்பு செய்து கொண்ட துயரச் சம்பவம்!

கொழும்பு முதல் வெலிமட வரை பயணித்த நபர் ஒருவர் பேருந்தில் உறங்கியதால், தனது இலக்கை தவறவிட்டு, அறியப்படாத ஊர் ஒன்றில் இறங்கிய வேளை அவரை திருடன் எனத் தவறாக எண்ணி, கிராமவாசிகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதல் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அறிந்த குறித்த நபர், மனமுடைந்து உயிர்மாய்ப்பு செய்து...

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் விபத்து; இருவர் காயம்!

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று (08) காலை லொறி ஒன்றும், மோட்டார் வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் லொறி வீதியில் கவிழ்ந்துள்ள நிலையில், போக்குவரத்துக்குக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img