Sunday, May 3, 2026
No menu items!

அரிசி இறக்குமதி

நெல்லுக்கான உத்தரவாத விலை – அரசினை குற்றஞ்சாட்டிய மஹிந்த அமரவீர..!

அம்பாறை, சம்மாந்துறை, உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்கனவே நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், 85 முதல் 90 ரூபா வரை மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகள் நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கம் இன்னும் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்கவில்லை என முன்னாள் விவசாய அமைச்சர்...

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு !

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகத் தலைவர்கள் பொது நிதிக்கான பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்தனர். பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு, தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கடந்த 28 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் கூடியபோதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், நெல் கொள்முதல் செய்வதற்காக...

இனி அரிசி இறக்குமதி இல்லை – வர்த்தக அமைச்சு தெரிவிப்பு..!

அரிசியை இனிமேலும் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் அதன் காரணமாக அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிக்கப்படாது எனவும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அனுமதிப்பத்திரமின்றி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருந்தது. குறித்த அனுமதியுடன் தனியார்...

அரிசி மீண்டும் இறக்குமதி செய்யப்படாது – அதிர்ச்சியில் மக்கள்..!

அரிசி இறக்குமதி செய்வதற்கு இனி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று (11/1/2025) லுனுகம்வெஹெர, பன்னேகமுவ பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்வது...

அரிசி இறக்குமதி செய்யப்பட்டால் அவை திருப்பி அனுப்பப்படும் – வசந்த சமரசிங்க அதிரடி..!

தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு அமைய, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் வர்த்தகர்களால் அரிசி இறக்குமதி செய்யப்பட்டால் அவை மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரவித்துள்ளார். அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 31ஆம்...

நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி வெளியீடு..!

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு வெளியிடப்படுவதாக, லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சமித்த பெரேரா தெரிவித்தார். இவ்வாறு வெளியிடப்படும் அரிசி அரசு கட்டுப்பாட்டு விலையில் விற்கப்படும். உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், அரிசி இறக்குமதிக்கான அவசரகால பதில் திட்டத்தை வகுப்பதில் உள்ள சவால்களையும் அவர் வலியுறுத்தினார்.

கால அவகாசத்தை நீடித்து வர்த்தமானி அறிவித்தல்..!

தனியார் துறையினர் அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தனியார் துறையினரால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலம் அவகாசம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனுமதிப் பத்திரமின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்குத் தனியார்த் துறையினருக்கு வழங்கப்பட்ட காலம் அவகாசம் கடந்த 20 ஆம் திகதியுடன்...

67,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி – விலை தொடர்பில் மக்கள் யோசனை..!

தனியார் துறையின் அரிசி இறக்குமதிக்கான காலக்கெடு நேற்று (20.12.2024) நள்ளிரவுடன் முடிவடைவதற்கு முன்னர் வர்த்தகர்களால் 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர் சந்தைகளில் பல வகையான அரிசியின் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை சமீபத்தில் காணப்பட்டதால், உள்நாட்டு விநியோகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...

அரிசி இறக்குமதியால் உள்நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பா?

தற்போது அரிசி 22,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அரிசியை தற்போது பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மேலும் 10,000 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சந்தையின் தேவையைக் கருத்தில் கொண்டு அரிசி இறக்குமதிக்...

அரிசி இறக்குமதியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்..!

இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்கபட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (20.12.2024) நிறைவடையவிருந்தது. தற்போது வரையில் தனியார் இறக்குதியாளர்கள் மூலம் 35,600...
- Advertisement -spot_img

Latest News

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிப்பு ?

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்பு (SSCL) மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ச்சியாக குறைந்தமை காரணமாக, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும்...
- Advertisement -spot_img