Thursday, July 23, 2026
No menu items!

உதய கம்மன்பில

உதய கம்மன்பிலவின் நாடகத்தால் அல்விஸ் அறிக்கையின் அனைத்து இரகசியங்களும் உடைந்துவிட்டது; பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் நாடகத்தால் ஏ. என். ஜே. தி அல்விஸ் அறிக்கையின் அனைத்து இரகசியங்களும் உடைந்துவிட்டதாகவும் இனிமேலும் அதில் மூடி மறைக்க எதுவும் இல்லை என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இன்று (22) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். “ஏ. என். ஜே. தி அல்விஸ் அறிக்கை...

உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது ; விஜித ஹேரத்!

பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எக்காரணத்துக்காகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவையும் ஷானி அபேசேகரவையும் பணி நீக்கம் செய்ய மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயாக்க எந்த தவறும்...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட உதய கம்மன்பில!

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்படாத இரண்டு விசாரணைகள் தொடர்பான...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு;உதய கம்மன்பில!

ஜனாதிபதி அல்லது தற்போதைய அரசாங்கம் இதுவரை வெளியிடாத ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு அரசாங்கத்திற்கு விடுத்த கால அவகாசம் இன்று காலை 10 மணியுடன் நிறைவடையும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக தற்போது பகிரங்கப்படுத்தப்படாத இரண்டு ஜனாதிபதி விசாரணைக்...

உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது ; காமினி பெர்ணாண்டோ!

உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுக்களை அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ள அறிக்கைகள் குறித்து நாங்கள் ஆர்வம்...

உதய கம்மன்பிலக்கு  விஜித ஹேரத் விடுத்துள்ள கோரிக்கை!

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வஜன பலய கட்சியுடன் இணைந்த உதய கம்மன்பில!

பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில, சர்வஜன பலயவின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று கையொப்பமிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியை உருவாக்கி அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் நம்பிக்கையுடன் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்றத்தில் பொதுமக்களுக்காக குரல் கொடுக்க...

மைத்திரிக்கு  சிறை தண்டனை! சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரிக்கை

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 7 வருட சிறைத்தண்டனை வழங்க முடியுமென பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையை மறைத்த குற்றச்சாட்டுக்காக இவ்வாறாக சட்டத்துக்கமைய அவர் கைது செய்யப்படலாமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான உண்மையை...

தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு..!

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். மாகாண சபைகளிடம் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் வகையில் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அவர் முன்வைத்துள்ளார். பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதனால் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் முன்னதாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி, மாகாண...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img