Sunday, April 19, 2026
No menu items!

ஓகஸ்ட்

8 மாதங்களில் வாகன இறக்குமதிக்காக இலங்கை செலவழித்தது  பில்லியனை கடந்தது – மத்திய வங்கி தகவல்!

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதங்களில் இலங்கை அரசாங்கம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த தகவல், மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பரிவர்த்தனை செயல்திறன் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. ஓகஸ்ட் மாதம்...

பதவி விலகவுள்ள ஜப்பானியப் பிரதமர்!

ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) ஓகஸ்ட் மாத இறுதிக்குள் தனது பதவி விலகலை அறிவிப்பார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் தலைமையிலான ஜப்பானின் ஆளும் கூட்டணி, நாட்டின் மேல் சபையில் பெரும்பான்மையை இழந்தமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

இம்மாதம் இறுதிக்குள் பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

பல்கலைக்கழக அனுமதிக்காக இம் முறை 87,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் போதிய பணியாளர் இல்லாததால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை விரைவாக தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படுமெனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த...

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். “இந்தத் தேர்தலை இலக்காக கொண்டு அரசாங்கத்தால் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு நாட்டை இட்டுச்...

வௌியான மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல்..!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் திகதியான ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முந்தைய நாள் (14.08) நண்பகல் 12 மணிக்கு முன்னர் அல்லது அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள்​ வேட்பாளர்களின் வைப்பு பணம் செலுத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதிவிசேட வர்த்தமானி அறிவத்தல் ஒன்றை வௌியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img