Wednesday, April 29, 2026
No menu items!

ஓமந்தை

வவுனியா ஓமந்தை விபத்தில் படுகாயமடைந்த இந்திய தூதரக உத்தியோகத்தரின் மகன் உயிரிழப்பு!

வவுனியா, ஓமந்தையில் கடந்த மே மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பமொன்று பயணித்த கார், டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது . இவ் விபத்தில் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் கலாசார உத்தியோகத்தராக பணிபுரிபவருமான சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் என்பவர் உயிரிழந்தார். இவ் விபத்தில் படுகாயமடைந்த அவரது மனைவியான யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர், மகன் ஆகியோர் சிகிச்சை...

ஓமந்தையில் கோர விபத்து – இந்திய துணை தூதரக உயர் அதிகாரி உயிரிழப்பு..!

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று திங்கட்கிழமை (26.05.2025) அதிகாலை 4.30க்கு ஓமந்தைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காரில் பயணம்...

ஓமந்தை ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவிப்பு..!

யாழ்ப்பாணத்திற்கான ஏ-9 பிரதான வீதி ஓமந்தை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்படி, வாகன சாரதிகள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அல்லது மதவாச்சி, செட்டிக்குளம், மன்னார் ஆகிய மார்க்கங்களில் யாழ்ப்பாணத்தை அடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...

மிளகாய் தூள் வீசி வாள்வெட்டு…!

ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் (10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியல் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையில் காணி தொடர்பாக சிறிய பிணக்கு ஒன்று இருந்து...

ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!

வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் நேற்று (18.09.2024) மாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. ஏ9 வீதி ஊடாக வவுனியா நோக்கி வந்த மோட்டர் சைக்கிள் ஓமந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தடியில்...

ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் சாவு…!

வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழில் இருந்து வவுனியா நோக்கி இன்று (10.09) மாலை சென்ற புகையிரதமானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது புகையிரத தண்டவாளத்தில் நடந்து  சென்ற பெண் மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்....

புதையல் தோண்ட முற்பட்ட 5 பேர் வவுனியாவில் கைது…!

ஓமந்தை, விளாத்திக்குளம் பகுதியில் வைத்து பூசாரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார், விளாத்திக்குளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட 5 பேரினை கைது செய்துள்ளனர். கண்டி பகுதியில் இருந்து வருகை தந்த பூசாரி மற்றும் வவுனியாவின்...

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 02 மாத குழந்தை பரிதாப மரணம்!

வவுனியா - ஓமந்தை - புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின்  சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வரவேற்பறை சுவரின் ஒரு பகுதியே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. இவ் விபத்தில் 02 மாத குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார்...

வவுனியாவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பலி..!

நேற்று மாலை வவுனியா ஓமந்தையில் ஏற்பட்ட கோர விபத்தில்  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தானது டிப்பர்வாகனமும் கப்வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு 7.00மணியளவில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img