Wednesday, July 22, 2026
No menu items!

கனடா

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்

கனடாவின் தெற்கு ஒட்டாவாவிலுள்ள  பார்ஹேவன் புறநகரின் வீடொன்றில் இலங்கையை சேர்ந்த குடும்பத்தினரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன . குறித்த  சம்பவத்தில் தாயும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும்  உயிரிழந்துள்ளதுடன் குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பேர்...

கனடாவுக்கு பறக்கவுள்ள அனுர..!

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் வாரம் கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன் போது, கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின் போது கனடாவில் உள்ள அரசியல்வாதிகளை அவர் சந்திக்கவுள்ளதுடன், ரொரன்டோ பகுதியில் நடைபெறவுள்ள கூட்டமொன்றிலும் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

யாழில் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி..!

கனடாவிற்கு அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த அரசியல்வாதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்  மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என தெரியவந்துள்ளது. வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது யாழ். செம்மணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்புவதாக கூறி கட்டம் கட்டமாக ஒரு கோடியே 25 இலட்சம்...

கனடாவில் இளையோர் மத்தியில் பரவும் புற்றுநோய்..!

கனடாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் புற்றுநோய்த் தாக்கத்தினால் மரணிப்பவர்களில் சுமார் 11 வீதமான மரணங்கள் பெருங்குடல் புற்று நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களை விட, 50 வயதுக்கும் குறைந்தவர்கள் மத்தியிலேயே இப்புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கனடாவில் பெண்களில் 18 பேரில் ஒருவருக்கும்,...

கனடாவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு மிரட்டல்..!

கனடாவிலிருந்து அமெரிக்கா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்றிற்க்கு  மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த  விமானம் கடந்த 19ஆம் திகதி கனடாவின் ஹாலிஃபாக்ஸிலிருந்து நியூஜெர்ஸியிலுள்ள Newark என்னுமிடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது மதியம் 12 மணியளவில் அந்த விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விமானிகள் அந்த விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளதோடு,...

இலங்கை தமிழ் சமூகத்திற்கு கனேடிய பிரதமர் வழங்கியுள்ள உறுதி

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  உறுதியளித்துள்ளார்.  தைப்பொங்கல் நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே இவ்வாறு  உறுதியளித்துள்ளார். மேலும் கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்  1983ஆம் ஆண்டு இலங்கையில் வன்முறைகள் ஆரம்பித்த காலத்தில்...

நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை கட்டுப்படுத்த கனடா திட்டம்

தற்காலிக குடியிருப்பு அனுமதி திட்டங்களின் கீழ் கனடாவுக்கு வருபவர்களைத் தடுத்தால், 2024இல் கனடாவின் பொருளாதார மந்தநிலை மேலும் மோசமாகும் என நிதி அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களின் வருகையால் கனடாவின் மக்கள் தொகை கடந்த ஆண்டில் உயர்ந்துள்ளமையினால்,  நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை கட்டுப்படுத்த கனடா திட்டமிட்டு வருகிறது. ஆனால் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை (non-permanent...

உலகிலேயே மிக மெதுவாக வாகனங்கள் இயக்கப்படும் நகரம் 

உலகிலேயே வாகனங்கள் மிக மெதுவாக இயக்கப்படும் நகரமாக லண்டன் பதிவாகியுள்ளது. இதன்படி, மத்திய லண்டனில் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 37 நிமிடங்கள் 20 நொடிகள் ஆகுமென கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 55 நாடுகளில் 387 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் மையத்தில் மணிக்கு 50 மைல் தாண்டி வாகனங்களை இயக்க முடியாது...

கனடாவில் குறைந்த விலையில் காணிகள்;

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு பகுதி காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் , புதிதாக வீடுகளை நிர்மானிக்கப்படவுள்ளதாகவும் , கனேடிய அரசாங்கம் திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளது. இந்நிலையில், பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படக்கூடியகாணிகளே இவ்வாறு சிறு தொகையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் ,எதிர்வரும் 2024ஆம் ஆண்டில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் கோச்ரானின் மேயர் பீட்டர்...

கனடாவில் கொவிட்  தொற்றாளர்கள் அதிகரிப்பு !

கனடாவின் ஒட்டாவாவில் கொவிட் நோயார்களின் அனுமதிகள் அதிகரித்துள்ளதாக கொவிட் நோயாளர்களுக்கான வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் வீரா எட்சஸ் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோய்த் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் இதனால் அவர்கள் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img