Tuesday, July 28, 2026
No menu items!

கேகாலை

விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை.. பாதுகாப்பாக மக்களை வெளியேற்றுமாறு அறிவிப்பு!!

கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிவப்பு அறிவிப்புகளுக்கு இணங்க இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கண்டி,...

கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை, மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல மற்றும் அம்பன்கோறளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை (நிலை 2) விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, பதுளை மாவட்டத்தின்...

டேன் பிரியசாத்தின் கொலை: சந்தேக நபர்கள் கைது !

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஒரு துப்பாக்கிதாரி கேகாலை, ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் உட்பட மூவர் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் ஒருவரும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் கேகாலை மற்றும் வெலிஓய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் இராணுவத்தில்...

வீதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!

கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இன்று (02) காலை இடம்பெற்றதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கேகாலை கலிகமுவையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 21 பேர் காயம்!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தும், கேகாலையில் இருந்து இரத்தினபுரி ​நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர்...

பிரதான போக்குவரத்து பாதைகளில் மாற்றம்..!

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடன்வல சுவர்ண வாலுகாராம விகாரையில் வருடாந்திர எசல பெரஹெர ஊர்வலம் இன்று (19) இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை நடைபெற உள்ளது. ஊர்வலம் ஸ்வர்ண வாலுகாராம விகாரைக்கு அருகில் இருந்து தொடங்கி, கரவனெல்லவிலிருந்து கேகாலை கரவனெல்ல வீதி வழியாக பயணித்து, ருவன்வெல்ல ராஜசிங்க கல்லூரிக்கு எதிரே...

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

பலத்த மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு எச்சரிக்கை, இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை 10 மணி முதல் எதிர்வரும் 24...

வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு..!

கேகாலை, அரநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்பொக்க பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவர் ஞாயிற்றுக்கிழமை (23/02/2025) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் கல்பொக்க பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். இவர் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து...

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவர் கைது !

வத்தேகம பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவரை வெட்டிக் கொன்றதாகக் கூறப்படும் 3 சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று (08) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 25, 35 மற்றும் 37 வயதுடைய கரந்தெனிய, கேகாலை மற்றும் ஹெட்டிமுல்ல ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், டிசம்பர் மாதம் ஆரம்பித்து முதல் வாரத்தில் 521 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 46,048 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img