Tuesday, July 28, 2026
No menu items!

கேகாலை

மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த ஆணொருவர் சடலமாக மீட்பு..!

கேகாலை, மங்களகம பிரதேசத்தில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (22.11.2024) இரவு ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மங்களகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை, மங்களகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 20 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில்  மூன்று நாட்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் சடலமாக மீட்கப்பட்டவரின் சகோதரன்,...

கேகாலையில் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கேகாலை தெலி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 27 வயதுடையவர் என்பதுடன், நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து தனது பிறந்தநாளைக் கொண்டாட வந்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த இளைஞன் கேகாலையைச் சேர்ந்த அஷான் பிரபோதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்கள் நீராடச் செல்வதற்கு முன்னர் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பல மணி நேரம்...

கேகாலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 312,441 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 109,691 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 26,309 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 12,373 சர்வஜன சக்தி...

பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சடலமாக மீட்பு!

பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் ஒய்வுபெற்ற ஆசிரியருமான கிரிஷாந்த புலஸ்தி என்பவர் கொஸ்ஸின்ன என்ற இடத்திலுள்ள வீட்டில் நேற்று (28) கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது கைகள் கட்டப்பட்டு, வாயக்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்டு அவர் அணிந்திருந்த சாரத்தால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் வீட்டின் மின்சாரம் செயலிழந்துள்ளதாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து...

தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை..!

தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்ற வரலாற்றை இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா படைத்துள்ளார். நிமேஷா கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளித்த சோசலிசக் கட்சிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ்,  மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் படுகாயம்…!

அவிசாவளை - கேகாலை வீதியில் ஹோட்டல் ஒன்றுக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின்போது, மோட்டார் சைக்கிள் செலுத்துநர் படுகாயமடைந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கேகாலையில் கிணற்றில் வீழ்ந்து பெண் உயிரிழப்பு…!

கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வறக்காப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவரே உயிரிழந்துள்ளார். தனது தாய் வீட்டில் இல்லாததை அவதானித்த மகள் தாயை தேடியுள்ளார் இதன்போது, வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றிற்குள் தாய் சடலமாக கிடப்பதை கண்ட மகள்...

கேகாலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி…!!

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - கொழும்பு வீதியில் 69 கிலோமீற்றர் மைல்கல் அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21.07) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹன்தெஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த  முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த கார் ஒன்றுடன் மோதியதில் குறித்த...

ஜனாதிபதி நிதிய கொடுப்பனவு 100% அதிகரிப்பு…!!

இதயம் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை அரசாங்கம் 100% அதிகரிப்பதாகவும், விண்ணப்பம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் செலுத்துவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜனாதிபதி நிதியத்தில் இந்த நோயாளிகளுக்காக 50% ஈடுசெய்யப்பட்டதாகவும், ஆனால் இந்த அறுவை சிகிச்சைகளுக்காக ஆகஸ்ட் 2022 க்குள் கிட்டத்தட்ட 8,000 விண்ணப்பங்கள்...

சட்டவிரோத சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது… !

ரம்புக்கனை குடாகம பிரதேசத்தில் சட்டவிரோத சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடையொன்றில், கேகாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே  இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து  140 சட்டவிரோத சிகரெட்டுகள்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவர் ரம்புக்கன பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,  ரம்புக்கனை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img