Friday, June 5, 2026
No menu items!

தேசிய மக்கள் சக்தி

கொழும்பு பிரதி மேயர் பதவி சண் குகவரதனுக்கு வழங்குமாறு அழுத்தம்

அண்மையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி 265 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியுள்ளது. எனினும் இதில் 116 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் மாத்திரம் தான் தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மை தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க...

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பது குறித்த கலந்துறையாடல்..!

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையே முக்கிய கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்க தரப்பினரைப் போன்று எதிர்க்கட்சியும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில்,...

தேசிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டோம் – சி.வி.கே. சிவஞானம்..!

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்பட மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அதன் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடக்கில் NPPக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றமை வரலாற்று முக்கியத்துவம் – அமைச்சர் சந்திரசேகர்!

'தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசியல் இருப்புக்காகவே தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டதாக சில குழுக்கள் போலி பிரச்சாரம் முன்னெடுத்துவருகின்றன." - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...

கொழும்பு மாநகர சபையில் (CMC) NPP யே ஆட்சியை அமைக்கும்; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ!

கொழும்பு மாநகர சபையில் (CMC) அதிக எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்றுள்ளதால், தேசிய மக்கள் சக்தி (NPP) நிர்வாகத்தை அமைக்கும் உரிமையைக் கொண்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயவின் (SJB) மேயரை நியமிப்பது குறித்த கூற்றுகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயதிஸ்ஸ, SJBயின் மேயர் வேட்பாளர் உள்ளூராட்சித் தேர்தலில்...

“முன்னணி கட்சியாக, எங்களுக்கு ஆட்சி செய்ய உரிமை உண்டு,”- ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு ஊழல் இல்லாத தேசிய சீர்திருத்த திட்டத்தைத் தொடர ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். "தனி ஒரு கட்சியாக NPP தெளிவான மற்றும் முன்னணி வெற்றியைப் பெற்றுள்ளது. இது சிறப்பு வாய்ந்தது," என்று சில்வா கூறினார். அதிகாரங்களை நிறுவுவதற்கு சுயாதீன குழுக்களுடன் இணைந்து...

கொழும்பில் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டதா NPP?

கொழும்பு மாநகர சபையில் (CMC) தேசிய மக்கள் சக்தி (NPP) 48 இடங்களை வென்றுள்ளது, ஆனால் தெளிவான பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது. உள்ளாட்சித் தேர்தல்களில் சி.எம்.சி.க்கான முடிவுகளின்படி, மற்ற கட்சிகள் கூட்டாக 69 இடங்களைப் பெற்றுள்ளன. அவற்றில், சமகி ஜன பலவேகய (SJB) 29 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 13 இடங்களையும் வென்றுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன...

தனது வாக்கினை செலுத்திய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன்!

யாழ்.மிருசுவில் உசைன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன் தனது வாக்கினை செலுத்தினார். (யாழ் நிருபர்-லோஜன் விஜயகுமார்)

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு..!

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பதையும் அவதானிக்க முடிகிறது. வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு...

எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு..!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட குழு உறுப்பினர் பூலோகராசா சிறீதரன் என்பவரால் குறித்த முறைப்பாடு நேற்று பதிவு செய்யப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின்...
- Advertisement -spot_img

Latest News

கோட்டாவின் பயணத் தடை; மன்னிப்பு கோரிய தேரர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை குறித்துத் தான் தெரிவித்த கருத்துகளுக்காக தினியவல பாலித தேரர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். ஊடகங்களுக்கு...
- Advertisement -spot_img