Sunday, August 9, 2026
No menu items!

பிள்ளையான்

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வு திணைக்களம், கடந்த ஜூன் 15 , 2008...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்த பிள்ளையான்!

முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிள்ளையான் என்று பரவலாக அறியப்படுகிறார், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போனதில் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பானது இந்த மனு....

பிள்ளையான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் – நளிந்த ஜயதிஸ்ஸவின் பரபரப்பு தகவல்!

கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியரை காணாமலாக்கியது மாத்திரமே பிள்ளையான் செய்த ஒரே தவறு என்று தீர்மானம் எடுத்துவிட வேண்டாம். அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தடுப்புக்காவலில் வைத்து அவரிடம் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மேலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள்...

பிள்ளையான் குறித்து நாமலின் கவலைக்கான காரணம் விரைவில் வெளியாகும் – நளிந்த ஜயதிஸ்ஸ!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எனவே, இந்த விடயம் தொடர்பில் விசாரணைக் குழு உரிய முறையில் விசாரணைகளை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம்...

தமிழ் தேசிய உடையை போட்டுக் கொண்டு நாடகமாடுபவர்களின் கதைக்கு மக்கள் ஏமாறக் கூடாது – சுரேஸ்!

கடந்த காலத்தில் முள்ளிவாய்க்கால் போர் அவலத்தின் போது ராஜபக்ஸ குடும்பத்துடன் இணைந்து கிரிபத் உண்டு வெடி கொழுத்தி மகிழ்ந்ததுடன்  பிள்ளையான், கருணா குழுவுடன் இணைந்து மேடைகளில் ஏறி வாக்குகேட்டு பிரச்சாரம் செய்ததுடன்  சின்னவத்தை விகாரையை  கட்டுவதற்கு அழைப்பு விடுத்தவர்கள் தமிழ் தேசிய உடையை போட்டுக் கொண்டு இன்று வெள்ளைவேட்டி சேட்டுடன் மாலை போட்டு நாடகமாடி...

பிள்ளையானின் வழக்கில் உதய கம்மன்பில ஆஜராவது அரசியல் சூழ்ச்சி – நளிந்த ஜயதிஸ்ஸ!

‘‘பிள்ளையானின் வழக்கில் சட்டத்தரணியாக உதய கம்மன்பில ஆஜராகியுள்ளார். கம்மன்பில வழக்கில் வாதாடுவதை நாட்டு மக்கள் கண்டதில்லை. ஆனால், பிள்ளையான் அவரின் சட்டத்தரணியாக தெரிவு செய்திருக்கிறார். பிள்ளையானின் வழக்கில் உதய கம்மன்பில ஆஜராவது வெறுமனே அரசியல் பழிவாங்கல் இல்லை. இதுவொரு அரசியல் சூழ்ச்சியாகும்’’ என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தலைக்கு எண்ணெய்...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பு; ஆனந்த விஜேபால!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் கணிசமான அளவு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான், 2006 ஆம் ஆண்டு ஒரு இளைஞர் கடத்தப்பட்ட வழக்கில் தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) காவலில் உள்ளார்.

பிள்ளையானை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை..!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன்...

பிள்ளையானிடம் விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி..!

பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று அவர் மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி,...

பிள்ளையான் கைது செய்யப்பட்டமைக்கு பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று இரவு பட்டாசு கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் வைத்து...
- Advertisement -spot_img

Latest News

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாபெரும் சாதனை படைத்த ‘துரந்தர்’

பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், பிரபல இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய உலகளாவிய சாதனையைப்...
- Advertisement -spot_img