மகிழுந்து
புதிய செய்திகள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பாரிய விபத்து!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பாரவூர்தி இரண்டு வேன்கள் மற்றும் ஒரு மகிழுந்து ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக...
புதிய செய்திகள்
காவல்துறையின் உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்!
உத்தரவை மீறி பயணித்த மகிழுந்தின் மீது மாலபே காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த வாகனத்திலிருந்து 02 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
30 வயதுடைய ஒரு ஆண் ஒருவரும், 33 வயதுடைய ஒரு பெண் ஒருவருமே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகள்
பறவைக் கூட்டத்தை சுட்டுக் கொல்ல முற்பட்ட அதிகாரிகளுக்கு நேர்ந்த சோகம்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அருகில் பறவைக் கூட்டத்தைச் சுட்டுக் கொல்ல முற்பட்டதில் 3 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் இன்று மதியம் 11.45 மணியளவில், விமான நிலைய ஓடுபாதைக்கு மேலே பறக்கும் பறவைகள் கூட்டம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து 3 அதிகாரிகள் விமான ஓடுபாதைக்கு அருகில்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


