உத்தரவை மீறி பயணித்த மகிழுந்தின் மீது மாலபே காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த வாகனத்திலிருந்து 02 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
30 வயதுடைய ஒரு ஆண் ஒருவரும், 33 வயதுடைய ஒரு பெண் ஒருவருமே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








