Monday, April 20, 2026
No menu items!

முகாமைத்துவ பணிப்பாளர்

அமெரிக்க WTI கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்து இலங்கை கலந்துரையாடல்: CPC அதிகாரி தகவல்!

எண்ணெய் கொள்முதல் செய்யும் போது விலைமனு கோரல் செயல்பாட்டில் US West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெயைச் சேர்ப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலத்த மழை காரணமாக நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்!

நாடு முழுவதும் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 42 நீர்த்தேக்கங்கள் பலத்த மழை காரணமாக நிரம்பி வழிவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அம்பாறை மாவட்டத்தில் 7, அநுராதபுரத்தில் 6, பதுளையில் 5, பொலன்னறுவையில் 3 மற்றும் திருகோணமலையில் 3 நீர்த்தேக்கங்களிலும் நிரம்பி வழிகின்றன. இதேவேளை, மின்னேரியா, கவுடுல்ல, கந்தளாய், இராஜாங்கனை, லுணுகம்வெஹெர, சேனநாயக்க சமுத்திரம் மற்றும்...

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் பிற்போடப்பட்டது..!

தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவையை இன்று முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கப்பல் சேவை மீண்டும் தாமதமடைவதாக குறித்த கப்பல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். வெவ்வேறு தரப்பிடம் இருந்து கிடைக்கப் பெற்ற வானிலை முன்னறிவித்தலைக்...

IMF இனால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தைச் செயற்படுத்தி வரும் இலங்கை!

இலங்கை அதிகாரிகள் தங்களது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் நிலைத்து நின்று பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரிக்கப்படும் பொருளாதார...

IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கை தூதுக்குழுவுடன் சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா வாஷிங்டனில் இலங்கை தூதுக்குழுவுடனான சந்திப்பைத் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். IMF-ஆதரவு திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாதுகாக்கும் நோக்கில், சீர்திருத்த முயற்சிகளைத் தொடர்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை வலுப்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img