சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா வாஷிங்டனில் இலங்கை தூதுக்குழுவுடனான சந்திப்பைத் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
IMF-ஆதரவு திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாதுகாக்கும் நோக்கில், சீர்திருத்த முயற்சிகளைத் தொடர்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை வலுப்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவையும் ஜோர்ஜீவா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.








