Saturday, April 18, 2026
No menu items!

விபத்து

ஹொரனை – இரத்தினபுரி வீதியில் கோரவிபத்து!

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இன்று முற்பகல் நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் இடங்கொட மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

மரத்துடன் பஸ் மோதி விபத்து.!

மொரட்டுவை ராவதாவத்தை பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை (13) காலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸானது மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி முன்னால் இருந்த இரும்பு கம்பியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் பெரிதளவில் காயங்கள் ஏற்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு...

பேருந்து விபத்து குறித்து வெளியான முக்கிய தகவல்..!!

எல்ல பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவர், சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாரதி பிரேக் செயலிழந்ததாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருடன் உரையாடலில் ஈடுபட்டதாகவும், அப்போது ஒரு வளைவில் செல்லும்போது பிரேக் செயலிழந்ததாக சாரதி தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார். சாரதியின் கூற்றைக் கேட்டு பேருந்து நடத்துனரும், ஏனைய...

எல்ல – வெல்லவாய வீதியில் கோர விபத்து; 15 பேர் பலி!

எல்ல - வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 06 பேர் சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 1000 மீற்றர் வரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுக்...

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கோரவிபத்து; இருவர் பலி!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி தருமபுரம் பகுதியை சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், கனரக டிப்பர் ஒன்றும், உந்துருளியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குளியாப்பிட்டிய விபத்து – டிப்பர் சாரதிக்கு விளக்கமறியல்!

குளியாப்பிட்டிய விலபொல சந்தியில் இடம்பெற்ற கொடூர விபத்தில் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று (27) காலை பல்லேவெல பாலம் அருகே டிப்பர் வாகனமும் பாடசாலை வேனும் மோதியதில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூவர் உயிரிழந்ததுடன், மேலும் 13 மாணவர்கள்...

பாடசாலை சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மோதி விபத்து; மூவர் பலி!

குளியாப்பிட்டி - தும்மலசூரிய பகுதியில் உள்ள நிலபொல பாலத்திற்கு அருகில் பாடசாலை சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்து; 73 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 17 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான்-ஈரான் எல்லையில் உள்ள இஸ்லாம் காலா என்ற நகரத்துக்கு அருகில் நேற்றிரவு இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றே பாரவூர்தியொன்றுடனும் உந்துருளியொன்றுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதியின் அதிகப்படியான வேகம்...

யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து விபத்து – பலர் காயம்!

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (15) காலை 7.15 மணியளவில் குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பேருந்தில் 30 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த...

மின்னேரியாவில் பேருந்து – பார்வூர்தி நேருக்கு நேர் மோதல்: 27 பேர் காயம்!

மின்னேரியாவில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்தும் பார்வூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img