Saturday, July 25, 2026
No menu items!

வீதி

கம்பளையில் கோர விபத்து; 3 பெண்கள் பலி !

கம்பளை தொழுவப் பகுதியில் நடந்த துயர விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் வீதியைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த சிற்றூந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சிற்றூந்து சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் சம்பவத்துக்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் பேருந்து மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் பெரும் போக்குவரத்து நெரிசல்!

ஓல்காட் மாவத்தையில், ரயில்வே தலைமையகத்திற்கு அருகாமையில், இன்று (26) காலை தனியார் பயணிகள் பேருந்து மீது மரம் வீழ்ந்தது பெரும் கவலைக்கிடமான சம்பவமாக இடம்பெற்றது. விபத்து நேரத்தில் பேருந்தில் பயணிகள் இருந்தாலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த மரம் முறிந்து வீழ்ந்த சம்பவம் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வழமையான போக்குவரத்துக்கு...

சுகாதார முறைகளை மீறிய உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை!

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பரிசோதனையின் போது மனித நலனுக்கு ஏற்புடையதல்லாத மற்றும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட உணவகங்கள் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,...

கதிர்காம யாத்திரை முடித்து திரும்பிய பேருந்து விபத்தில் 3 பேர் காயம் – காத்தான்குடியில் சம்பவம்!

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்து இன்று காலை (30) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் இடம்பெற்றது. இவ் விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில்...

பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்; தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

வீதியைத் தடை செய்தமையின் காரணமாகப் பேருந்து ஓட்டுநர் ஒருவரைச் சிலர் தாக்கியுள்ளனர். காலி - மாத்தறை வீதியில் பயணித்த தனியாருக்குச் சொந்தமான பேருந்து ஓட்டுநரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். வெளிநாட்டவர்கள் சிலரைப் பேருந்தில் ஏற்றிய போது ஏற்பட்ட வீதி தடையின் காரணமாகப் பேருந்து ஓட்டுநரை இவ்வாறு தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வீதி துப்பரவுப் பணிகள் முன்னெடுப்பு..!

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. அதன் ஒரு அங்கமாக கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் மகிழூர் பிரதான வீதி புதன்கிழமை (05.03.2025) துப்பரவு செய்யப்பட்டன. மிக நீண்டகலமாக குறித்த வீதியின்...

கொழும்பு பிரதான வீதியில் லொறி விபத்து!

பதுளை-கொழும்பு பிரதான வீதியில், தெமோதர சந்தியில் ஓடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் ஒரு சக சாரதி காயங்களுக்கு உள்ளானதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து பதுளைக்கு ஓடுகளை ஏற்றிச் சென்ற இந்த லொறி, இன்று (23) காலை தெமோதர சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த...

மீண்டும் மூடப்படவுள்ள கண்டி-மஹியங்கனை வீதி!

கண்டி-மஹியங்கனை வீதி பாறைகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் இன்று (22) மாலை 6 மணி முதல் நாளை (23) காலை 6 மணி வரை மூடப்படும் என்று கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஓட்டுக்காக வீடு வந்தவரே, வந்த வீதியை மறந்தது ஏன்? – யாழில் உண்ணாவிரத போராட்டம்..!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு பின்னர் 30 வருடங்களுக்கு மேலாக வல்வெட்டித் துறையிலிருந்து தொண்டைமானாறு வரையான 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது புதிய...

பூரணப்படுத்தப்படாத வீதி – புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை..!

திருநெல்வேலி, கலாசாலை வீதியின் காப்பெட் இடும் பணிகள் இடை நடுவில், வீதி அபிவிருத்தி திணைக்களம் கைவிட்டு உள்ளதாகவும், வீதியினை பூரணமாக காப்பெட் வீதியாக புனரமைத்து தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆடியபாதம் வீதியில் இருந்து, கோப்பாய் இராச பாதை வீதி வரையிலான 1.515 கிலோ மீற்றர் தூரமான கலாசாலை வீதியினை காப்பெட் வீதியாக புனரமைப்பதற்கான பணிகள் கடந்த...
- Advertisement -spot_img

Latest News

நாட்டின் ஒருசில பகுதிகளில் மழை!

மேல் மாகாணம்,சபரகமுவ மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில்,நாட்டின்...
- Advertisement -spot_img