ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து ஏ.ஜே.எம். முஸம்மில் விலகியுள்ளார்.

அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்தக் கடிதத்தில், தமது பதவி விலகலின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

அதேநேரம் பல ஆளுநர்கள் பதவியில் இருக்கும் போதே, வெவ்வேறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்து வருகின்றமை தொடர்பாகத் தாம் அதிருப்தி கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here