பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக இன்று (08.07) முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இவ் 1700 ரூபாய் சம்பளத்தை கட்டாயம் பெற்று கொடுப்போம் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
ஆனால் இதில் இருக்கும் ஒரு விடயம் என்னவென்றால், இன்றைக்கு இளைஞர்களை பொறுத்தவரைக்கும் அவர்கள் பெருந்தோட்ட சமூகத்தினரை பற்றி அறியாத நபர்களாகத்தான் இருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்த 1700 ரூபாய் சம்பளமானது மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை கொண்டு வராது என அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், கொரோனாவுக்கு முன்னால் வறுமையின் விழுக்காற்றானது பெருந்தோட்ட சமூகத்துக்கு மத்தியில் 23% சதவீதமாக இருந்தது, இன்றைக்கு அது 52% சதவீதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு குழந்தைகளை படிக்க வைக்கின்றார்கள். சுமார் 1 இலட்சம் மக்கள் இருக்கின்றார்கள் இந்த தோட்ட தொழிலை நம்பி, அந்த ஒரு இலட்சம் மக்களை நம்பி கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
ஆனல் இன்றைக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இதனை பலமாக எதிர்த்து ஒரு தவறான திரையை முன்னாள் கொண்டு வந்த இருக்கின்றார்கள்.
அதற்கு நாங்கள் கட்டாயம் பாடம் கற்பித்துகொடுப்போம். நான் மக்களுக்கு, அவர்களின் நம்பிக்கையை தளர விட வேண்டாம் என்று ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். என்னை பொறுத்த வரைக்கும் நாம் சொன்னதை கட்டாயம் செய்வோம்.
1700 ரூபாய் வர்த்தமானி வெளியிடும் போது சில தொழிற்சங்கங்கள் நாங்களும் பெற்றுக் கொடுத்தோம் என பெயர் கொடுத்திருக்கிறார்கள். அப்படி பெயர் தான் போட வேண்டும் என்றால் எனக்கு அது பற்றி பிரச்சனை இல்லை, தயவுசெய்து பெயர் போட்டுக்கலாம்.
நியாயமான தீர்வு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.