Tamil News Channel

இஸ்ரேலில் விவசாயிகள் பற்றாக்குறை – 10,000 இலங்கையர்கள் ஒப்பந்தம்

ISRAEL

இஸ்ரேலின் குளோப்ஸ் நாளிதழ் செய்தியில் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான காசா – இஸ்ரேல் போரினால் விவசாயத் துறைக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

போரினால் சுமார் 8,000 விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியதாகவும், தொடர்ந்து, 20,000 பலஸ்தீனிய விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேலில் விவசாயத் தொழிலாளர்களின் பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது .

இதற்காக 10,000 இலங்கைத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் உள்விவகார அமைச்சர் மோஷே ஆபெல் மற்றும் இலங்கைப் பிரதிநிதி ஆகியோர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சில் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையினால் விவசாயப் பணிகளுக்கு 10,000 இலங்கைத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான வாய்ப்பு இஸ்ரேல்க்கு உள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *