November 17, 2025
உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுமி பலி!
புதிய செய்திகள்

உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுமி பலி!

Jun 14, 2024

மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் நேற்று (13.06) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

விவசாயியான தந்தை வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்த வேளை  இயந்திர மக்காட் பகுதியில் அமர்ந்திருந்த அவரது 8 வயதுடைய மகள் திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *