ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலைத் தோட்டத்தின் மேல் பகுதியிலுள்ள வனப்பகுதியில் சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .
குறித்த சிறுத்தையின் வயிற்றிலும் முதுகிலும் பெரிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் , இரு சிறுத்தைகள் சண்டையிட்டதன் காரணமாக இந்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுத்தையின் சடலம் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 3