மட்டக்களப்பு, இடமலை காவல் நிலையத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, காவன்திஸ்ஸ கல்லூரிக்கு அருகில், குடிபோதையில் மோட்டார் வாகனத்தை ஓட்டியதற்காக, குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பாறை பிரதேச போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். மேலும், எதிர்வரும் 23 ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியின் சேவையை இடைநிறுத்த மட்டக்களப்பு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.








