சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கிடையிலான முக்கியமான சந்திப்பு இன்று (30) பூசனில் நடைபெற்றது.

சீனாவும் அமெரிக்காவும் வேறுபட்ட தேசிய நிலைமைகளைக் கொண்ட நாடுகள் என்பதால், கருத்து வேறுபாடுகளை முழுமையாகத் தவிர்ப்பது சாத்தியமில்லை என்று ஷி ஜின்பிங் தெரிவித்தார். எனினும், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கிடையில் ஏற்படும் சவால்களை நேர்மறை முறையில் நிர்வகிக்க இரு தலைவர்களும் முன்னெடுப்பு எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“சீனாவின் வளர்ச்சியும் புத்துயிர் பெறுதலும், டொனால்ட் டிரம்ப்பின் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குதல் என்ற இலக்குக்கு முரணானதல்ல. இரு நாடுகளும் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும்,” என்று ஷி ஜின்பிங் குறிப்பிட்டார்.

அத்துடன், சீன-அமெரிக்க உறவுகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கும், இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் உகந்த சூழலை உருவாக்குவதற்கும், டிரம்புடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here