வெசாக் பண்டிகை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, பல்பொருள் விற்பனை நிலையங்கள் உட்பட அனைத்து இறைச்சி கடைகளிலும் எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதி வரை இறைச்சி விற்பனை செய்யப்படாது என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வெசாக் பண்டிகை கொண்டாடப்படும்.
Post Views: 8