November 17, 2025
நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து..!
News Updates

நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து..!

Mar 22, 2024

பாகிஸ்தானிலுள்ள நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்கதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.இது குறித்து அதிகாரிகள் நேற்று(20) கூறியதாவது:பலூசிஸ்தான் மாகாணம், ஹர்னாய் மாவட்டம், ஜர்டாலோ பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெடிவிபத்து ஏற்பட்டது.

அப்போது அந்த சுரங்கத்தில் 20 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.இவ்விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.எட்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் முடித்துக் கொள்ளப்பட்டதாக நேற்று(20) அறிவிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *