ஜாலியகொட பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 23 வயதுடைய பிரபல நடிகை ஒருவரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்துள்ளதாக குறித்த நடிகை பிலியந்தலை பொலஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்திலிருந்து முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென முச்சக்கரவண்டியை வீதிக்கு அருகில் நிறுத்தி, தொழில்நுட்ப கோளாறை சரிபார்ப்பதாக கூறிய சாரதி, முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி பின்னால் அமர்ந்திருந்த நடிகையை துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து சாரதியை விட்டு நடிகை அங்கிருந்து தப்பிச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.