சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமையால் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
புலத்சிங்கள கீழ் வெல்கம பிரதேசத்தைச் சேர்ந்த எழுவரே கைது செய்யப்பட்டதாகவும் தாக்குதலுக்குள்ளான இரண்டு அதிகாரிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.