கோழி ஈரலை சுத்தம் செய்யாமல் மண்ணுடன் கோழிப் பாத்திரத்தில் பரிமாறிய ஹோட்டல் சமையற்காரருக்கு 10,000 ரூபா தண்டம் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி நேற்றையதினம் உத்தரவிட்டார்.

சம்பவத்தன்று, கடந்த மாதம் 25ம் தேதி, சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், மேற்படி ஹோட்டலில் சிக்கன் கறி வாங்கி சாப்பிட எடுத்துச் சென்றுள்ளார்.

இதன் பின்னர், குறித்த ஹோட்டலுக்கு கறியுடன் சென்று கறியில் மண் இருப்பது தொடர்பில் தெரிவித்த பின்னர் அதனை பொது சுகாதார அதிகாரிகளிடம் வழங்கி ஹோட்டலுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனடிப்படையில் ஹோட்டல் சமையலறை முகாமையாளர் பொது சுகாதார பணிமனைக்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் பொது சுகாதார அதிகாரிகள் அவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, அந்த நபருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here