Friday, April 24, 2026
No menu items!

வியாழக்கிழமை

கொழும்பில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது!

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ்புர பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை (08)  மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு 14 பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர்...

யாழில் நிமோனியா காய்ச்சலினால் பெண்ணொருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் நிமோனியா காய்ச்சலினால் பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை (17)  உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த 44 வயதுடைய   பெண்ணே உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையில் நிமோனியாவினால் தான் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.  

  தொடரும் காஸா மீதான தாக்குதல்…!

இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரையில் நடைபெற்று வருகின்றது. காசாவை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரையில் 39 ஆயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், காசாவிலுள்ள ஷெஜையா எனுமிடத்தில் பலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள பாடசாலையொன்றின் மீது நேற்று வியாழக்கிழமை இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில்...

ஊடகவியலாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு!

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அர்சசுதநாயர் சேகுவாரா நேற்றையதினம் வியாழக்கிழமை காலமானார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் நண்பருடன் தங்கியிருந்த வேளை காலை நெஞ்சு வலிப்பதாக நண்பரிடம் கூறி சில நிமிடங்களில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம்...

முசலி பிரதேச இளைஞர்,யுவதிகளுக்கு காணி தொடர்பாக இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தமர்வு!

இழந்த காணிகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (25) முசலி கோட்ட கல்வி பணிமனை இல் இடம்பெற்றது. அரச திணைக்களங்கள்,பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை ஜனநாயக ரீதியாக பெற்றுக் கொள்வதற்கு இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மெசிடோ நிறுவனத்தின்...

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் பொது நினைவேந்தல்! 

இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செழுத்தும் நிகழ்வு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது தமிழின வறலாற்றில் என்றுமே மறக்கமுடியாத 'வெலிக்கடை சிறைப் படுகொலை ' இடம்பெற்ற நாளான இன்று  வியாழக்கிழமை மாலை 3.05 மணிக்கு, யாழ்ப்பாணத்திலுள்ள 'தந்தை செல்வா கலையரங்கில்' ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின்...

யாழ்.  சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள்!

யாழ்.  சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் இன்று  25/07 வியாழக்கிழமை காலை இடம்பெற்றன. சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது வாகனங்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுதிகள் ஆகியன பரிசோதிக்கப்பட்டன. ...

கர்நாடகாவில் வேகமாக பரவும் நோய்!

இந்தியா, கர்நாடகாவில் நாளுக்கு நாள் டெங்கு பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தார்வார் மாவட்டம், மம்மிட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபால் லமாணி என்பவரின் 5 மாத பெண் குழந்தையான ஆராத்தியா கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நேற்று வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியாவில்...

மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்றையதினம் வியாழக்கிழமை சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமாண்!

மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்றையதினம் வியாழக்கிழமை சென்ற கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமாண் அந்நாட்டு சபாநாயகர் ஜோஹாரி அப்துல், பாராளுமன்ற உறுப்பினர் YB துவான் சோங் சியெங் ஜென்,டத்தோஸ்ரீ  சரவணன் முருகன் மற்றும் ஏனைய பாராளுமன்ற  உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். 1959ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட  மலேசியா பாராளுமன்றத்தில் இலங்கை...

மட்டக்களப்பு ஹோட்டலில் கொள்வனவு செய்யப்பட்ட மண்ணுக்கு 10,000 ரூபா வைப்புத் தொகை!

கோழி ஈரலை சுத்தம் செய்யாமல் மண்ணுடன் கோழிப் பாத்திரத்தில் பரிமாறிய ஹோட்டல் சமையற்காரருக்கு 10,000 ரூபா தண்டம் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி நேற்றையதினம் உத்தரவிட்டார். சம்பவத்தன்று, கடந்த மாதம் 25ம் தேதி, சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், மேற்படி ஹோட்டலில் சிக்கன் கறி வாங்கி சாப்பிட எடுத்துச் சென்றுள்ளார். இதன் பின்னர், குறித்த ஹோட்டலுக்கு கறியுடன்...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் கால்பந்து வீரர்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை;ட்ரம்ப்

2026 உலகக் கிண்ணத்தில் ஈரான் கால்பந்து வீரர்கள் விளையாடலாம், எனினும் அவர்களுடன் ஐ.ஆர்.ஜி.சி. (இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை) அமைப்புடன் தொடர்புடைய எவரும் பங்குபற்ற முடியாது...
- Advertisement -spot_img